திருடச்சென்ற வீட்டில் திருடுவதை விட்டுவிட்டு சமைத்து சாப்பிட திருடன்!

திருடச்சென்ற வீட்டில் திருடன் சமைத்து சாப்பிட வேடிக்கையான சம்பவம் புளோரிடாவில் நிகழ்ந்துள்ளது!!

Last Updated : Sep 8, 2019, 08:10 PM IST
திருடச்சென்ற வீட்டில் திருடுவதை விட்டுவிட்டு சமைத்து சாப்பிட  திருடன்! title=

திருடச்சென்ற வீட்டில் திருடன் சமைத்து சாப்பிட வேடிக்கையான சம்பவம் புளோரிடாவில் நிகழ்ந்துள்ளது!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், திருடச்சென்ற வீட்டில் திருடன் சமைத்து சாப்பிட நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சேப்டி ஹார்பர் பகுதியில் தனியாக இருந்த ஒரு வீட்டின் பின் கதவை உடைத்து விட்டு ஒரு திருடன் நுழைந்துள்ளான். வீட்டிற்குள் நுழைந்த திருடன் நேராக சமையல் அறைக்குள் சென்று சமைக்க துவங்கிவிட்டான். அந்த வீட்டில் வசித்து வந்தவர் வீட்டின் பெட்ரூமில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். சமையலறையில் சமைக்க துவங்கிய திருடன் ஆர்வமாக சமையல் வேலையில் ஈடுபட்டார்.

வீட்டில் சமையல் அறையில் இருந்து ஏதோ சத்தம் வருவதை கேட்ட வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் எழுந்து சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு வேறு ஒருவர் சமைத்துக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டின் ஓனர் வந்ததை பார்த்த திருடன் அவரிடம் நீங்கள் போய் தூங்குங்கள் என கூலாக சொல்லியுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் ஓனர் போலீசிற்கு போன் செய்வதாக மிரட்டியதை அடுத்து அவர் பயந்து வீட்டில் இருந்து ஓடிவிட்டார். வீட்டின் ஓனர் பின்னர் போலீசாருக்கு போன் செய்ததில் அவர்கள் வந்து விசாரணை நடத்தி வீட்டிற்கு பின்னால் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த திருடனை கைது செய்தனர். 

வீட்டு ஓனரின் பெயர் மற்றும் திருடனின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. ஆனால் சம்பவம் நடக்கும் போது திருடன் மது போதையில் இருந்ததாக மட்டும் தகவல் வெளியிட்டுள்ளனர். 

 

Trending News