ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றிகளை பெற்று முன்னேறுவதற்கான நெறிமுறைகள், ராஜதந்திரம் ஆகியவற்றை வகுக்கும் சிறந்த நிபுணராகக் கருதப்படுகிறார். ஆச்சார்ய சாணக்கியர் சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் வெற்றிப் படிக்கட்டில் ஏறுவதோடு மட்டுமல்லாமல், பிரச்சனைகளிலிருந்து விலகி மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், ஒருவர் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், குறிப்பிட்ட சில தண்மை கொண்ட நபர்களுக்கு முன்னால் அமைதியாக இருந்து முன்னேறுவது நல்லது என்று கூறியுள்ளார். ஏனெனில் அத்தகையவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதிகார போதை கொண்ட மனிதர்களின் வாதம் செய்வதும் பேசுவதும் நல்லதல்ல
அதிகார போதையில் இருக்கும் ஒருவர், உலககே தனது கைப்பிடிக்குள் இருப்பதாக உணர்கிறார். அவருடைய விருப்பமின்றி ஒரு அணுவும் அசையாது என்ற மனநிலை கொண்டவர். உலகில் உள்ள அனைவரையும் தனது விருப்பப்படி ஆட்டி வைக்க விரும்புகிறார். எனவே, இந்த போக்கைக் கொண்டவர்களுடன் நீங்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது. அதிகார போதையில் இருக்கும் ஒருவர், காலமே மிகவும் சக்தி வாய்ந்தது என்ற காலத்தின் ஆற்றலை மறந்துவிடுகிறார். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. காலத்தால் எல்லாம் மாறுகிறது என்பதை அறியதவராக இருக்கிறார். இவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை
குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு முன்னால் அமைதியாக இருப்பது நல்லது
காலத்திற்கு ஏற்ப தனது மனநிலையை மாற்றிக்கொள்ளும் தன்மை அனைவருக்கும் வேண்டும். பயனில்லாத சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி சிந்தித்து மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் ஒருவரால் ஒருபோதும் மாற்றத்தைத் தொடர முடியாது. குறுகிய மனப்பானமை கொண்ட ஒருவர் வாழ்க்கை நடைமுறையை பிரிந்து கொள்ளாமல், மாறாக பழமையில் ஊறிப்போனவராக இருப்பார். அத்தகையவர்கள் தங்கள் குறுகிய மனநிலையை உலகளாவிய உண்மையாகக் கருதுகிறார்கள், எனவே அத்தகையவர்களுடன் வாதிடுவதற்குப் பதிலாக, நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
ஆணவம் கொண்டவர்கள் முன் அமைதியாக இருங்கள்.
மக்களிடம் பல வகையான ஈகோக்கள் உள்ளன. பொதுவாக பலர் தங்கள் அழகு, செல்வம், வீடு, புகழ், வேலை, உயர் பதவி, சாதி, பரம்பரை போன்றவற்றைப் பற்றி பெருமைப்படலாம். ஆனால் பெருமை இறுதியில் ஒரு நபரை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. அகங்காரம் நிறைந்த ஒரு மனிதன் தன்னைக் கடவுளாகக் கருதத் தொடங்குகிறான். எனவே ஒருவன் அகங்காரவாதிகளுடன் எந்த விதமான வாக்குவாதத்திலும் பேச்சிலும் ஈடுபடக்கூடாது. அது தான் நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும்
தங்களை மிகவும் புத்திசாலிகள் அல்லது சிறந்தவர்கள் என்று கருதுபவர்களுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்
உலகில் எல்லாம் தெரிந்தவர் யாரும் கிடையாது. ஆனால் இன்னும் பலர் தங்களை எல்லாம் தெரிந்த வல்லுநர்களாக கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் வேலை தான் சிறந்தது அல்லது தங்களை மிஞ்சி யாருமில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் முழுமையற்ற அறிவின் காரணமாக, அத்தகைய மக்கள் தங்களை அறிவாளிகள் என்றும், மற்றவர்களை முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள், எனவே அத்தகையவர்களுடன் வாதிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் தவறான எண்ணங்களில் வாழ விடப்பட வேண்டும்.
உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் முன் அமைதியாக இருங்கள்
எந்த விதமான குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உங்கள் வெற்றி, அறிவு அல்லது அழகு போன்றவற்றைப் பார்த்து பொறாமை உணர்வு இருக்கும். அப்படிப்பட்டவர்களே தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுகிறார்கள். அதனால் அவர்களின் தன்னம்பிக்கை ஆட்டம் காணும். அத்தகையவர்களுக்கு முன்னால் நீங்கள் எந்த விஷயத்திலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினால், அந்த விஷயத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்கள் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தொடங்குவார்கள். இதனால், நமக்கு மன கஷ்டம் ஏற்படுவது தான் மிச்சமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ