)
ஆச்சார்ய சாணக்கியர் இந்தியாவின் மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த அரசியல் மற்றும் தத்துவஞானியாகக் கருதப்படுகிறார். அவர் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தில், இராணுவம், வெளியுறவு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் பற்றி ஆழமான விஷயங்கள் கூறப்பட்டன. அவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகத்தில், வாழ்க்கையில் சிலரை விட்டு விலகி இருப்பது, பிரச்சனைகளை தவிர்க்க உதவும் என்பதையும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவதையோ அல்லது அவர்களுக்கு வழிகாட்டுவதையோ செய்யாமல் இருப்பது நல்லது எனவும் கூறியிருந்தார். அத்தகையவர்கள் யார், யாரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
அறிவுரை எதுவும் வழங்காமல் விலகி இருப்பது நல்லது
ஆச்சார்ய சாணக்கியரின் (Chanakya Niti) கூற்றுப்படி, ஒரு முட்டாள் நபருக்கு ஒருபோதும் அறிவுரைக் கொடுக்கக்கூடாது. இதைச் செய்வதில் எந்தப் பலனும் இல்லை, மாறாக, இழப்புகளை தான் சந்திக்க வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, பறவை மற்றும் குரங்கின் கதையிய கூறலாம். இதில் முட்டாள் குரங்குக்கு வீடு கட்ட அறிவுரை கூறியதன் மூலம் பறவை தனது கூட்டை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல், ஒரு முட்டாள் நபருக்கு சரியான ஆலோசனை வழங்குவதன் மூலம், அறிவுரிய கூறிய நபர் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
பொல்லாத எண்ணம் கொண்ட பெண்களிடம் இருந்து லிலகி இருக்க வேண்டும்
வாழ்க்கையில், பொல்லாத எண்ணம் கொண்ட மற்றும் விபச்சாரப் பெண்ணை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. அத்தகைய பெண்கள் எந்த நேரத்திலும் உங்களை ஏமாற்றலாம். மேலும் இவர்கள் உங்கள் சொத்தை, பணத்தை கைப்பற்றி ஏமாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உயிருக்கே அச்சுறுத்தலாகவும் மாறலாம். அத்தகைய பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்வதன் மூலம், ஆண்களும் புத்திசாலிகளும் துக்கத்தைத் தவிர வேறு எதையும் பெற மாட்டார்கள்.
பணம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டியவர்கள்
சாணக்ய நிதி கூறுகையில், செல்வத்தை அழித்தவர்களை, அதாவது திவாலானவர்களை, நம்பி கடன் கொடுக்கக் கூடாது. அத்தகையவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பணத்தை இவர்களுக்கு சரியாக பயன்படுத்த தெரியாமல், இருப்பவர்களுக்கு கட்ன கொடுப்பதால், இல்லையெனில் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும்.
நட்பு கொள்ளக்கூடாத சில நபர்கள்
எப்போதும் சோகமாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவராகவோ இருக்கும் ஒருவரின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்யர் கூறுகிறார். அத்தகையவர்களுக்கு அவநம்பிக்கையான சிந்தனை இருக்கும், அவர்களுடன் வாழும் மக்களும் இப்படித்தான் ஆகிவிடுவார்கள். சோகத்தை வெல்வது தெரியாமல் போய் விடும். இதனால், வெற்றி அவர்களை விட்டு ஓடத் தொடங்குகிறது.
தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவருக்கு உதவலாம்... ஆனால் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும். ஆனால், அவர்களிடம் நெருங்கிச் செல்லாமல், அவர்களிடமிருந்து இடைவெளியைப் பராமரிக்க வேண்டும், இல்லையெனில், நீங்களும் நோய்வாய்ப்படலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் அவர்களைச் சந்திக்கச் சென்றாலும், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு குறிப்பிட்ட தூரத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும்.
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ