ஹென்னா என்பது நேச்சுரல் ஹேர் டை என கருதப்படுகிறது. எனினும், இதனை அதிக அளவில் பயன்படுத்துவது கூந்தலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கூந்தலுக்கு வண்ணம் தீட்ட, ரசாயனங்கள் கலந்த ஹேர்டை பயன்படுத்துவதை விட, மெஹந்தி அல்லது ஹென்னா என்னும் மருதாணி பவுடர் பயன்படுத்துவது, மிகவும் பாதுகாப்பானதாக இயற்கையானதாக கருதப்படுகிறது. செயற்கை ஹேர் டை விட இது சிறந்தது என்று இதனை அதிக அளவில் பலர் பயன்படுத்துகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருதாணி
கூந்தலுக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் என்றாலும், இயற்கையான கருமை நிறத்தை பெறவும் பல நேரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. கூந்தலுக்கும் சருமத்திற்கும் வண்ணம் தீட்ட, மருதாணி பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹென்னா என்பது நேச்சுரல் ஹேர் டை என கருதப்படுகிறது. எனினும், இதனை அதிக அளவில் பயன்படுத்துவது கூந்தலுக்கு நல்லதல்ல (Hair Care Tips) என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அளவிற்கு அதிகமான மருதாணி பவுடர் அல்லது ஹென்னா பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
வறட்சி மற்றும் கூந்தல் முனைகள் பிளவுபடும் அபாயம்
மருதாணியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது, தலைமுடியில் வறட்சியை ஏற்படுத்தும். இதில் உள்ள டானின்கள், கூந்தலில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சியை ஏற்படுத்தலாம். மேலும், அடிக்கடி பயன்படுத்தும் போது, தலைமுடியில் உள்ள ஈரப்பதம் நீங்கி, கூந்தல் முனைகள் பிளவு படும் அபாயம் அதிகரிக்கிறது.
தலைமுடி அமைப்பில் மாற்றம்
ஹென்னா அல்லது மெஹந்தியை அதிகம் பயன்படுத்துவது, முடியின் இயற்கையான அமைப்பை மாற்றும் என்கின்றனர். அதாவது மென்மையாகவும் பட்டுப்போலவும் இருக்கும் கூந்தல், கரடு முரடு தன்மையுடனும் வறட்சியுடனும் காணப்படலாம்.
தலைமுடி மெலிதல் அல்லது உடைதல்
மருதாணி தலைமுடியை வலிமையாக்கும் என்றாலும், அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது எதிர்விளவில் ஏற்படுத்தியும். தலைமுடியின் தண்டுகள் பலவீனமடைந்து, முடி உடையும் அபாயம் அதிகரிக்கிறது. உச்சந்தலையில் உள்ள இயற்கையான ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதம் அகற்றப்படுவதால், தலைமுடி மெலிந்து உதிர்ந்து போகக்கூடும்.
இயற்கைக்கு மாறான நிறம்
மருதாணியை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம், முடியில் ஒரு வண்ண அடுக்கு உருவாகி, சீரற்ற மற்றும் இயற்கைக்கு மாறான நிறம் ஏற்பட வழிவகுக்கும். அதோடு மருதாணி ஏற்படுத்திய நிறம் மங்கு அதிக காலம் எடுக்கும் என்பதால், சில நேரங்களில் திட்டு திட்டாக தோன்றலாம். இதனை முழுமையாக அகற்றுவதும் கடினம் ஆகலாம்.
ஒவ்வாமை ஏற்படும் அபாயம்
சென்னா என்னும் மருதாணி, இயற்கை தயாரிப்பு என்றாலும், அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் போது, அதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். உச்சந்தலையில் எரிச்சல், சருமம் சிவத்தல், அரிப்பு அல்லது தடிப்புகள் போன்ற எதிர்வினைகள் ஏற்படும் சாத்தியம் உண்டு. சிலருக்கு தோல் அலர்ச்சி நோயையும் ஏற்படுத்தும்.
பளபளப்பான நீண்ட அழகான அடர்த்தியான கூந்தலை பெறவும், தலைமுடி நரைப்பதை தவிர்க்கவும். கூந்தலுக்கு ஊட்டத்தை கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது அவசியம். அதனுடன் கூந்தலை பராமரிக்க, அதற்கு ஊட்டம் அளிக்கும் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய், மூலிகை கலந்த எண்ணெய்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது பலன் தரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ