)
Easy Techniques To Handle Work Pressure : இப்போதைய சூழலில், நம்மால் வீட்டில் இருக்கும் அழுத்தத்தையும், அலுவலகத்தில் கொடுக்கும் அழுத்தத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால், பல நேரங்களில் பீரிட்டு அழுவது, உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டுமென நினைப்பது போன்ற விஷயங்களை செய்வோம். ஆனால், இதனை சமாளிக்க வேறு சில வழிகளும் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
பேசுவதர்கு முன்..
அலுவலகத்தில் டென்ஷன் ஆகும் போது, நமக்கு உடனே அதற்கு ரிப்ளை-ரியாக்ட் செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும். அல்லது பதற்றமாகி, காரியங்களை சிதற விடுவோம். அதையெல்லாம் தவிர்த்து, எதுவும் செய்யும் முன்பு சில வினாடிகள் அப்படியே அமைதியாக இருங்கள் இதைசெய்வதால், நீங்கள் அந்த சூழலை கண்ட்ரோல் செய்து கொள்ளலாம்.
சூழலை திரும்ப ஓட்டிப்பாருங்கள்..
அழுத்தம் நிறைந்த தருணங்கள், நாம் அதிகம் யோசிப்பதால் ஏற்படுகின்றன. எனவே, அதற்கு முன்பு “இதை சரிசெய்ய, என்னால் இப்போதைக்கு என்ன செய்ய முடியும்?” என்று யோசியுங்கள். அப்படித்தான், அந்த சூழலை நீங்கள் சமாளிக்க முடியும்.
கட்டுப்படுத்த முடிந்தது..
ஒரு விஷயத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது அழுத்தம் எழும். எனவே, ஒரு விஷயம் உங்கள் கைகளை மீறி செல்லும் போது, உங்களால் எதை கட்டுப்படுத்த முடியுமோ, அதை மட்டும் யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்களால் உங்களின் பாஸின் மனநிலையை மாற்ற முடியாது. ஆனால், நீங்கள் அவரது கேள்விக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்பது உங்கள் கைகளில் உள்ளது. எனவே, அதில் மட்டும் உங்கள் ஆற்றலை செலுத்தி, வேலை செய்ய வேண்டும். எது உங்கள் கைகளில் இல்லையோ அதனை விட்டுவிடுவது சிறந்தது.
5-4-3-2-1 டெக்னிக்:
இந்த சிம்பிளான டெக்னிக், நீங்கள் அதிகம் யோசிக்காமல் இருப்பதை தடுக்கவும், தேவையற்ற அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கவும் உதவும். நீங்கள் பார்க்கும் 5 விஷயங்களின் பெயரை கூற வேண்டும், உங்களுக்கு கேட்கும் 4 விஷயங்களுக்கு பெயரிட வேண்டும். உங்களது 3 உணர்ச்சிகளை குறிப்பிட்டு, 2 வாசணைகளை கண்டறிந்து, 1 சுவையை குறிப்பிட வேண்டும். இது கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் இருக்க உதவும்.
தயாராக இருப்பது:
அழுத்தம், எப்போது வருகிறது எப்படி வருகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நம்மால் அதற்கு முன்கூட்டியே தயாராக இருந்துவிட முடியும். உதாரணத்திற்கு ஒரு பெரிய மீட்டிங்க் இருக்கிறது என்றால் அதற்கு முன்னரே நீங்கள் வெற்றி கிடைத்தது போல நினைத்த் பார்க்க வேண்டும். ஏதேனும் ஒரு கடினமான விஷயத்தை எதிர்கொள்ளும் முன்பு, அதற்கு என்னென்ன பதில்களை கூற வேண்டும், என்னென்ன பேச வேண்டும் என்பதை சில பாய்ண்ட்ஸ்களாக எழுதி வைத்துக்கொள்ளலாம். இதனால், நீங்கள் அப்படிபப்ட்ட சூழலில் எளிதாக அமைதியாக இருந்துவிட முடியும்.
பேசலாம்...
அனைத்தும் கையை மீறி செல்வது போல தோன்றினால் அதை யாரிடமாவது தெரிவிக்கலாம். அதை வார்த்தைகளாக யாரிடமாவது பகிரலாம். இதனால், மனபாரம் பாதியாக குறையும். அந்த நபர் நம்பிக்கைக்குரியவராக இருந்தால், கண்டிப்பாக உங்களுக்கு அந்த சூழலை சமாளிக்க சில அட்வைஸும் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ