)
நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டுக் கனவு நிறைவேற வீட்டுக் கடன் பெரிதும் கை கொடுக்கிறது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. நீண்ட கால கடனான வீட்டுக் கடன், வரி சேமித்துக்கும் உதவுகிறது. கடனை திரும்ப செலுத்துவது என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். இதனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக சீக்கிரமே அடைத்து பொறுப்பை நிறைவேற்றினால், கடன் டென்ஷன் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.
கடனை முன்கூட்டியே அடைப்பது பெரிய பொறுப்பில் இருந்து விடுவிக்கும்
சம்பளத்தில் கணிசமான தொகை வீட்டுக் கடனுக்கு செல்வதால், அதனை சீக்கிரம் அடைப்பது அதாவது கடனை முன்கூட்டியே அடைப்பது உங்களை மிகப் பெரிய பொறுப்பில் இருந்து விடுவிக்கும். இது பெரும் மன நிம்மதியையும் தரும். ரெப்போ வட்டி விகித குறைப்புக்கு பிறகு, வீட்டுக் கடன் வட்டித் தொகையை பல வங்கிகள் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எளிய நடுத்தர மக்களும், எளிதாக கடன் பெற்று என் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றலாம்.
வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்க உதவும் சில டிப்ஸ்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்த பின்னர், வங்கிகள் பல இஎம்ஐ தொகையை குறைத்துள்ளன. இந்நிலையில், இஎம்ஐ தொகையை குறைக்காமல், கடன் காலத்தை குறைக்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம், ஓரளவுக்கு வட்டியை சேமிப்பதோடு, கடனையும் முன்கூட்டியே அடைத்து விடலாம்.
குறைந்த வட்டி வசூலிக்கும் வங்கிக்கு கடன் இருப்பை மாற்றுதல்
தற்போது பல வங்கிகள், பிற வங்கிகளில் பெற்றுள்ள வீட்டுக் கடனை எடுத்துக் கொண்டு, கடன் இருப்பை மாற்றிக்கொள்ள உதவுகின்றன. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் பெற்ற நிலையில், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் மற்றொரு வங்கிக்கு மாற்ற நினைத்தால், வீட்டுக் கடன் தொகையில் இருக்கும் உங்கள் இருப்பை, நீங்கள் விரும்பும் வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் ஓரளவுக்கு வட்டியை சேமிப்பதோடு கடன் காலமும் குறையும்.
இஎம்ஐ தொகையை அதிகரிப்பதன் மூலம் விரைவில் கடனை அடைத்தல்
உங்கள் வருமானம் உயரும் போது, உங்களது இஎம்ஐ தொகையை அதிகரித்து, அதன் மூலமும் கடனை விரைவாக திரும்பச் செலுத்தி, கடன் காலத்தை குறைக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ரூ. 25 ஆயிரம் இ எம் ஐ தொகை செலுத்தி வரும் நிலையில், கூடுதலாக மாதம் பத்தாயிரம் செலுத்தி வரும் போது, வருடத்திற்கு ரூ.1,20,000 என்று அளவிற்கு அசலை அடைத்து விடுவீர்கள். இதன் மூலம் வட்டியை ஓரளவு குறைக்கலாம். அதோடு கடன் காலத்தையும் குறைத்து விடலாம்.
உபரியாக கிடைக்கும் பணத்தை வைத்து அசலை அடைத்தல்
உங்களுக்கு அவ்வப்போது உபரியாக கிடைக்கும் கூடுதல் பணத்தை, வீட்டு கடன் அசல் தொகையை அடைக்க பயன்படுத்திக் கொண்டால், இருப்பதோடு, கடன் காலத்தையும் குறைக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கடன் காலத்தை இரண்டு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை கூட குறைத்து விடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ