Herbs To Prevent Hair Turn In To White In Tamil: நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் சத்து குறைந்த உணவுக் கோளாறுகள் காரணமாக இளம் வயதிலேயே நரை முடி தொல்லை ஏற்பட்டுவிடுகிறது. முன்பு, 40-50 வயதில் நரை முடி ஏற்பட்டால், இப்போது இளம் வயதிலேயே அதாவது 20-25 வயதிலேயே நரை முடி ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடுகளே. உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், முடியில் உள்ள நிறமி மெலனின் குறைந்து, முடி வெண்மையாக மாறத் தோன்றும். இருப்பினும், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுத்தால், இந்த சிக்கலைத் தடுக்கலாம். குறிப்பாக சில ஆயுர்வேத மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் மாற்றலாம்.
முடி நரைப்பதைத் தடுக்க சிறப்பு மூலிகைகள் | Herbs To Prevent Black Hair Turn In To White In Tamil
நெல்லிக்காய் (Indian Gooseberry)
ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் எப்போதும் கூந்தலுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி முடியின் வேர்களை வலுப்படுத்தி நரை முடியை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வது முடியின் ஆயுளை அதிகரித்து அதன் இயற்கையான பளபளப்பைப் பராமரிக்க உதவுகிறது.
கறிவேப்பிலை (Curry Leaf)
கறிவேப்பிலை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவை தலைமுடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் நிறைந்துக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி ஊட்டச்சத்துக்கள் முடி வளரச்சியை ஏற்படுத்தும். மேலும் நரை முடியை தடுக்க உதவுகிறது. எனவே னீகள் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளவும்.
நீர்ப்பிரமி (Brahmi)
முடி நரைப்பதற்கு முக்கிய காரணமான மன அழுத்தம். இதை குறைக்க நீர்ப்பிரமி உதவும். நீர்ப்பிரமியை உட்கொள்வது அல்லது அதன் எண்ணெயை தடவுவது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும், மேலும் முடியின் வேர்கள் ஆரோக்கியமாக இருக்கும், இதனால் கூந்தல் நரை ஏற்படாமல் தடுக்கும்.
பிரிங்கராஜ் (Bringharaj)
பிரிங்கராஜ் என்பது முடியை வளர்க்கும் ஒரு பிரபலமான ஆயுர்வேத மருந்தாகும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது முடியை வலுவாகவும் நீளமாகவும் மாற்ற உதவுகிறது. இதை எண்ணெய் அல்லது பொடி வடிவில் கூந்தலில் பயன்படுத்தலாம்.
சங்கு புஷ்பம் (Shankhpushpi)
சங்கு புஷ்பம் என்பது நினைவாற்றலை மேம்படுத்த உதவும். அதோடு ஹார்மோன் சமநிலையையும் பராமரிக்கும் இது உதவுகிறது. இவை மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது, இது முடியை இயற்கையாகவே கருப்பாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடலில் உள்ள யூரிக் அமில அளவை குறைக்க... இந்த பானங்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ