Chennai Super Kings LIC Investment : ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை பிளேஆஃப்களுக்கு முன்னேறியுள்ளது, 10 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அத்துடன் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சிஎஸ்கே களத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு, களத்திற்கு வெளியேயும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்குக் காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் கூட்டு சேர்ந்ததே ஆகும். 2008 ஆம் ஆண்டு எல்ஐசி, இந்தியா சிமென்ட்ஸின் 1.8 கோடி பங்குகளை வாங்கியது. அந்த நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) உரிமையை இந்தியா சிமென்ட்ஸ் கொண்டிருந்தது.
56 கோடி முதலீடு
2008 ஆம் ஆண்டில், சிஎஸ்கே பங்குகளில் எல்ஐசி சுமார் ரூ.56 கோடி முதலீடு செய்தது. 2014 ஆம் ஆண்டில், சிஎஸ்கே ஒரு தனி நிறுவனமாக்கப்பட்டது. பின்னர் எல்ஐசி, சிஎஸ்கேவில் 6.04% பங்குகளைப் பெற்றது. அப்போது CSK-வின் பங்கின் விலை ரூ.31 ஆக இருந்தது. ஆனால் 2024-ல் இந்த விலை ரூ.190-195 ஆக உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்த விலை ஒரு சூழலில் ரூ.223 ஆக அதிகரித்தது. இதனால், எல்ஐசியின் முதலீடும் 529% அதிகரித்தது. லேட்டஸ்ட் மதிப்பீட்டின்படி, இந்த முதலீட்டிலிருந்து எல்ஐசி சுமார் ரூ.1000 கோடி வரை ஈட்டியுள்ளது.
எல்.ஐ.சி ஆறு மடங்குக்கும் அதிகமான லாபம்
தற்போது, எல்ஐசியின் முதலீடு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, காப்பீட்டு நிறுவனத்தின் முதலீடு சுமார் ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், எல்ஐசி சென்னை சூப்பர் கிங்ஸிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ஈட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகள் அதிகரித்ததற்கான காரணம், அணியின் வருமானத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஏற்றமே என நம்பப்படுகிறது. விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் வருமானம் 150% அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், சிஎஸ்கே ரூ.479 கோடி சம்பாதித்தது.
குறுகிய காலத்தில் 1365% அதிகரிப்பு
முன்னதாக 2023 ஆம் ஆண்டில், CSK-வின் லாபம் ரூ.14 கோடியாக இருந்தது, இது 2024 இல் ரூ.201 கோடியாக அதிகரித்தது. இந்த வழியில், குறுகிய காலத்தில் 1,365% அதிகரிப்பு இருந்தது. ஐபிஎல் ஊடக உரிமைகள் ஏலம் சென்னை அணிக்கும் பெரிதும் பயனளித்தது. 2023 ஆம் ஆண்டில், ஐபிஎல் அடுத்த நான்கு சீசன்களுக்கான ஊடக உரிமைகளை $6.4 பில்லியனுக்கு விற்றது. இதனால் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்கும் $13.4 மில்லியன் செலவானது. இந்த ஏலம் CSK போன்ற ஒரு அணியின் வருவாயில் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
சிஎஸ் அணியின் மார்க்கெட்டிங்
சிஎஸ்கே அணியின் வெற்றியில் தோனி பெரும் பங்கு வகித்துள்ளார். தோனிக்காகவே இன்னும் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வருகிறார்கள். அவரது தலைமையின் கீழ், சிஎஸ்கே களத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அதன் பிராண்ட் மதிப்பையும் அதிகரித்தது. சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் எல்லா வயதினரும் இருப்பது தான் சிறப்பு. இதுதவிர சிஎஸ்கே அணியின் மார்க்கெட்டிங் குழுவும் வலுவானது. முத்தூட் குழுமம் போன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் சிஎஸ்கேவை நிதி ரீதியாக வலுவாக மாற்றியுள்ளன.
எல்.ஐ.சி ஏன் ஆதரவளித்தது?
எந்தவொரு கம்பெனியிலும் முதலீடு செய்வதற்குப் பின்னால் இருப்பது அந்த நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்டுவதாகும். நாட்டில் கிரிக்கெட் வெறும் விளையாட்டாக மட்டுமல்லாமல், ஒரு பெரிய தொழிலாகவும் மாறிவிட்டது. சிஎஸ்கே போன்ற ஒரு அணியின் வெற்றி எந்தவொரு முதலீட்டாளருக்கும் நல்ல பலன்களைத் தருகிறது. முதலீட்டாளர்களின் பட்டியலில் எல்.ஐ.சியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், காப்பீட்டு நிறுவனம் அதன் பலனைப் பெற்றது. கிரிக்கெட் மைதானத்தைத் தவிர, வணிகத்திலும் சிஎஸ்கே ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.
மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மெகா ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ