தினசரி வீட்டில் 6 மணிநேரம் ஏசி பயன்படுத்தினால் மின்சார கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்?

ஏசியில் இருப்பது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என்றாலும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க செய்யலாம். மேலும் சிலருக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம்.

Written by - RK Spark | Last Updated : Apr 22, 2025, 06:12 AM IST
  • அதிகரிக்கும் கோடை வெயில்.
  • ஏசியின் தேவை அதிகரித்துள்ளது.
  • மின்சார கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்?
தினசரி வீட்டில் 6 மணிநேரம் ஏசி பயன்படுத்தினால் மின்சார கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்?

இந்தியாவில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் அதிக வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் போராடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். வட இந்தியாவை போலவே தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எப்போது இந்த கோடை காலம் முடியும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பலரது வீட்டிலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல ஏசியும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது. வெயிலின் தாக்கத்தை தணிக்க பலரும் வீட்டில் ஏசி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த சமயத்தில் பல நிறுவனங்களும் குறைந்த விலையில் ஏசியை விற்பனை செய்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | Bhagyashree Chair Exercises To Burn Belly Fat : 56 வயதில் தொப்பையை குறைத்த நடிகை! உட்கார்ந்து கொண்டே ‘இதை’ செய்யுங்கள்..

வெப்பநிலை தினசரி பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வருகிறது. இதனால் ஏசி வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு ஒரு விரும்பத்தக்க தேவையாக ஆக்கியுள்ளது. இந்த குளிரூட்டும் சாதனங்கள் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை காக்க மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. அதே வேளையில், ஏசியை அதிகம் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணங்கள் வெயிலின் தாக்கத்தை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக 1.5-டன் ஏர் கண்டிஷனரைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு மணிநேரம் செயல்படுவதற்கும் சுமார் 2.25 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் இந்த சாதனத்தை ஒருவர் பயன்படுத்தினால் மொத்த மாதாந்திர நுகர்வு 675 யூனிட்டுகளாக உயர்ந்துவிடும். இந்த கணிசமான பயன்பாடு, மாதாந்திர மின்கட்டணத்தை ரூ.3,500 வரை உயர்த்தக்கூடும்.

குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மின் கட்டணங்கள் கடுமையாக இருக்கும். மாற்றாக, ஏர் கண்டிஷனரை தினமும் 6 மணி நேரம் மிதமாக இயக்கினால், மாதாந்திர நுகர்வு 450 யூனிட்டுகளாகக் குறையும், இதன் விளைவாக மின்சாரக் கட்டணம் ரூ. 1,200-க்கு அதிகமாக இருக்கும். தினசரி 8 மணிநேரம் ஏசியைப் பயன்படுத்துபவர்களுக்கு இடைப்பட்ட கட்டணம் வரும். பலருக்கும் வீட்டில் ஏசி வாங்கி மாட்ட வேண்டும் என்று இருந்தாலும் மின்சார கட்டணத்தை மனதில் வைத்துக்கொண்டு வாங்காமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் இரவில் நிம்மதியான தூக்கம் பெற ஏசி அடிப்படை தேவை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது.

நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் ஏற்படும் ஆபத்துகள்

நீண்ட நேரம் ஏசியில் இருக்கும் போது அதன் காற்று சருமத்தை உலர்த்தி எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். குளிர்ந்த காற்று சிலருக்கு ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளை அதிகரிக்கக்கூடும். நீண்ட நேரம் ஏசியில் இருந்து வெளியே வரும் போது வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். ஏசியில் அதிக நேரம் செலவிடுவது சோர்வு மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஏசி சூழல்கள் நீரிழப்பை ஏற்படுத்தும், குறிப்பாக நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால். ஏசியில் நீண்ட நேரம் இருக்கும் போது தசை விறைப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Simran Beauty Tips: சிம்பிள் லுக் சிம்ரன் ஸ்டைல்....இந்த ஃபேஸ் பேக் வித்தையை பார்த்தீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News