How to Get PF Loan : மாத ஊதிய வேலைக்கு செல்லும் எல்லோருக்கும் பிஎப் கணக்கு இருக்கிறது. அந்த கணக்கில் வேலை செய்யும் நபரின் சம்பளத்தின் ஒரு பகுதி PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகையானது குறிப்பிட்ட காலத்துக்கு அந்த கணக்கில் எடுக்காமல் இருந்தால் டெபாசிட் செய்யப்படும் நபருக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். அதேநேரத்தில் அவசர தேவைகள் இருக்கும் சமயத்தில் பிஎப் அக்கவுண்டில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பகுதி பணத்தைகூட எடுத்துக்கொள்ள முடியும். இப்படியான சேவைகளும் பிஎப் கணக்கில் உள்ளன. இப்போது பிஎப் அக்கவுண்டில் இருக்கும் தொகைக்கு எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
PF-ல் கடன் வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்கு முன், PF கடனுக்கான தகுதி என்ன என்பதைப் பார்ப்போம்?
PF-ல் யார் கடன் வாங்கலாம்?
நீங்கள் PF-ல் கடன் வாங்க விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அந்த நபரிடம் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) இருக்க வேண்டும்.
- கடன் வாங்குபவர் EPFO-வில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- பணம் எடுக்கத் தேவையான தகுதியை நபர் பூர்த்தி செய்ய வேண்டும்.
- டெபாசிட் செய்யப்பட்ட பணம் வரம்பிற்குள் கடன் இருக்க வேண்டும்.
நீங்கள் PF-ல் எப்படி கடன் வாங்குவது?
PF-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திலிருந்து உங்கள் ஓய்வுக்காக ஒரு பெரிய நிதி உருவாக்கப்படுகிறது. இதனால் நீங்கள் ஓய்வு வாழ்க்கையில் எந்த பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள். எனவே, ஓய்வு பெறும்போது மட்டுமே PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த பணத்தை சில சூழ்நிலைகளில் எடுக்க முடியும். தேவைப்பட்டால் எந்தவொரு நபரும் PF-ல் இருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். இதைத்தான் EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) EPF கடன் என்று அழைக்கப்படுகிறது. சில சூழ்நிலைகளில் நீங்கள் EPF-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். உதாரணமாக, அவசரநிலை, வீடு வாங்குதல், திருமணம் மற்றும் குழந்தையின் உயர்கல்வி ஆகியவற்றிற்கு PF இலிருந்து பணத்தை எடுக்கலாம்.
PF கடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:
நீங்கள் PF கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளை கவனமாக பின்பற்றவும்.
- முதலில் நீங்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
- இங்கே UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்நுழையவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஆன்லைன் சேவையில் பிஎப் தொகை லோன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அங்கு காரணத்தையும், தொகையையும் பூர்த்தி செய்து உங்கள் செல்போனுக்கு வந்த ஓடிபியை உள்ளிட்டு விண்ணப்பிக்கவும்
- உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு பணம் கணக்கில் வந்து சேரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









