Remove Baldness From Get Hair Regrowth: இன்றைய நவீன வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான மாசுபாடு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே முடி ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். முதிர்ச்சியடையாத வழுக்கை என்பது இன்றைய காலத்தில் மிகவும் பொதுவான ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. ஒருமுறை முடி உதிரத் தொடங்கினால், அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வது மிகவும் கடினம். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன், கூந்தல் மீண்டும் வளரத் தொடங்கவும் உதவக்கூடும்.
வழுக்கை உச்சந்தலையில் முடி வளர என்ன செய்வது? (How to Grow Hair on Bald Scalp)
1. புதிய முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெயை விரல்களால் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது, லாரிக் அமிலம் முடியின் வேர்களை அடைந்து வழுக்கையான இடத்தில் தேவையான புரதத்தை வழங்குகிறது. இது புதிய முடி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் ஏற்கனவே உள்ள முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது.
2. வெங்காயம் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவும் (Onion)
வெங்காயம் துத்தநாகம் மற்றும் கந்தகம் போன்ற தனிமங்களின் களஞ்சியமாகும். இந்த இரண்டு கூறுகளும் முடியின் மறு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க உதவும். வெங்காய சாற்றை உச்சந்தலையில் மற்றும் கூந்தலின் வேர்களில் தடவும்போது, அவை நேரடியாக துத்தநாகம் மற்றும் கந்தகத்தின் ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. இதன் காரணமாக, புதிய முடி வளர்வதுடன், கூந்தலை வலிமையாகவும், அடர்த்தியாகவும் மாற்ற இது உதவக்கூடும்.
3. முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், வெள்ளை முடியை கருப்பாக்கவும் நெல்லிக்காய் (Amla)
நெல்லிக்காய் முடி தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். நெல்லிகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது சரும செல்களுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவை கூந்தலின் மறு வளர்ச்சிக்கு (Regrowth of Hair) மிகவும் அவசியம். அதனால்தான் நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு கூந்தலை மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
4. முடி வளர்ச்சிக்கு கற்றாழை (Aloe Vera)
முடி ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், கற்றாழையைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம். கற்றாழையை உச்சந்தலையில் தடவுவதன் மூலம், மயிர்க்கால்கள் நீரேற்றமாக இருக்கும். அதாவது, இது உச்சந்தலையில் இயற்கையான ஈரப்பதத்தை தர உதவுகிறது, இது முடியின் மறு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நல்ல பலன்களைப் பெற, கற்றாழையை தேங்காய் அல்லது வேறு ஏதேனும் எண்ணெய்யுடன் கலந்து கூந்தலில் தடவலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மிருதுவான, பளபளப்பான சருமம் வேண்டுமா? விளக்கெண்ணெய் பயன்படுத்தும் முறை இங்கே!
மேலும் படிக்க | Seeds for hair growth: நீண்ட கூந்தலுக்கு, இன்றிலிருந்து இந்த விதைகளை சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









