PF withdrawal ATM Latest Updates : ஊழியர்கள் விரைவில் தங்கள் EPF (ஊழியர் சேம நிதி) பணத்தை UPI மற்றும் ATM மூலம் எடுக்கலாம். IANS அறிக்கையின்படி, Employees' Provident Fund Organisation (EPFO) இந்த வசதியை மே 2025 இறுதி அல்லது ஜூன் 2025 தொடக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரலாம். இதனால், ஊழியர்கள் தங்கள் PF சேமிப்பை பயன்படுத்திக் கொள்ள இனி நீண்ட நாட்களையும், அதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை. இந்த முயற்சி தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் National Payments Corporation of India (NPCI) ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
முக்கிய மாற்றங்கள்:
- ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக எடுக்கலாம்.
- UPI பயன்பாட்டில் நேரடியாக PF பாலன்ஸ் சரிபார்க்கலாம்.
- வங்கி கணக்குக்கு தாமதமின்றி பணத்தை மாற்றலாம்.
- தேவைப்படும் போது எளிதாக பணத்தை அணுகலாம்.
தற்போது, PF பணத்தை எடுக்க ஆன்லைனில் கிளெயிம் செய்து, அங்கீகாரத்திற்காக காத்திருக்க வேண்டும், இது நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். UPI ஒருங்கிணைப்பு இந்த செயல்முறையை உடனடியாகவும், எளிதாகவும் மாற்றும்.
EPFO, ஓய்வுக்கு முன் PF பணத்தை எடுப்பதற்கான காரணங்களை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருத்துவ அவசரநிலை, வீடு வாங்க அல்லது கட்ட, வீடு கடன் திருப்பிச் செலுத்த, 10-ஆம் வகுப்புக்குப் பின் குழந்தைகளின் கல்வி, திருமணம், வேலையின்மை, உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு உபகரணங்கள் வாங்க, இயற்கை பேரழிவால் சொத்து சேதம், முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு ஆகியவற்றுக்காக எடுக்கப்படுகின்றன.
இது குறித்து தொழில் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா கூறியதாவது, 120-க்கும் மேற்பட்ட டேட்டாபேஸ்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிளெயிம் செயலாக்க நேரம் 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 95% கிளெயிம்கள் ஆட்டோமேடிக் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் அப்டேட்டுகள் நடந்து வருகின்றன.
பொது வருங்கால வைப்பு நிதியில் இந்த மாற்றம் ஏன்?
ஒரு காலத்தில் பொது வருங்கால வைப்பு நிதி மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கபட்டது. அதேநேரத்தில் அவசர தேவைகளுக்காக பணம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையிலும் மக்கள் இருந்தனர். நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய பங்களிப்பாக பார்க்கப்பட்ட பொது வருங்கால வைப்புநிதி ஊழியர்களின் அவசர தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதை பார்த்து பலரும் பொது வருங்கால வைப்பு நிதி விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவம், திருமணம் உள்ளிட்டவற்றுக்கு ஊழியர்கள் முறைப்படி விண்ணப்பித்து பிஎப் பணத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இப்போது இந்த நடைமுறை மேலும் எளிமையாக்கப்பட்டு தேவைப்படும் நேரத்தில் ஏடிஎம் மெஷின் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஊழியர்களின் பார்வையில் மிகப்பெரிய நல்வரவாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!
மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









