Reason Why You Should Soak Mangoes Before Eating : மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! அது ஏன் தெரியுமா?

Reason Why You Should Soak Mangoes Before Eating : கோடைக்காலம் ஆரம்பத்தாலே மறக்க முடியாத இரண்டு பழங்கள் உள்ளன. ஒன்று தர்பூசணி, இன்னொன்று வாழைப்பழம். இதில் முதலாவது நமது உடல் சூட்டை தீர்த்தால், இரண்டாவது பழம், சூட்டை அப்படியே அதிகரிப்பதாக இருக்கும்.
நம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மா, பலா, வாழை ஆகியவைதான் முதன்மை பழங்களாக பார்க்கப்படுகிறது. பலரது வீட்டு விஷேஷங்களில் சீர்வரிசைகளில் முதலாவதாக இருக்கும் பழம், மாம்பழமாக இருக்கும். இதை தவிர்த்து, இந்த பழத்தை கடித்து, சுவைத்து, ரசித்து, ருசித்து சாப்பிடுவதற்கென்றே பல மாம்பழ பிரியர்கள் இருக்கின்றனர்.
இந்த மாம்பழத்தின் சுவை, நாம் வாங்கும் மாதத்தை பொறுத்தும் இடத்தை பொறுத்தும் மாறுபடலாம். ஒரு சில வகை மாம்பழங்கள், புளிப்பான சுவையையும், ஒரு சில மாம்பழங்கள் இனிப்பு சுவையையும், ஒரு சில மாம்பழங்கள், இரண்டும் கலந்த சுவையையும் கொடுக்கும். அது சரி, எந்த மாம்பழத்தை சாப்பிடும் முன்பும், அதை கண்டிப்பாக தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனரே. அது ஏன் தெரியுமா?
மாம்பழத்தில் இருக்கும் நன்மைகள்:
பல்வேறு வயதினரும் விரும்பி சாப்பிடும் மாம்பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சத்துகள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இதில் கண்பார்வை திறனை அதிகரிக்கும் சக்தியும் சருமத்தை பளபளக்க வைக்கும் சக்தியும் கூட உள்ளதாம்.
பீட்டா கெரோட்டீன் சத்துகள் நிறைந்த மாம்பழம், நாள்பட்ட நோய் பாதிப்புகளையும் சரிசெய்ய உதவும் என கூறப்படுகிறது. இதனால் நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரக ஆகிய பாகங்களின் செயல்பாடுகளும் சரியாக இருக்குமாம்.
தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்:
மாம்பழம் மட்டுமல்ல, நாம் எந்த பழத்தை எடுத்துக்கொண்டாலும், அவற்றை சுத்தமான நீரில் கழுவி பின்னர் சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால், மாம்பழத்திற்கு நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மெனக்கெட்டால், கண்டிப்பாக அதில் இருக்கும் நன்மைகளை முழுமையாக அடையலாம்.
பலர், மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். சில இடங்களில் மாம்பழங்களை கடையில் வைத்து விற்பதற்கு முன்பு சரியாக கழுவியிருக்க மாட்டார்கள். இதனால், பலர் மாம்பழத்தில் இருக்கும் அழுக்கு செல்ல வேண்டுமென இப்படி செய்வதுண்டு. அது மட்டுமல்லாமல், மேற்குறிப்பிட்டிருக்கும் மாம்பழத்தில் உள்ள சத்துகள், அதனை ஊற வைத்து சாப்பிட்டால்தான் கிடைக்கும் என சிலர் நம்புகின்றனர். இது குறித்து பேசும் மருத்துவர்கள், மாம்பழத்தை கழுவி சாப்பிட்டாலும், ஊற வைத்து சாப்பிட்டாலும் அதில் என்ன நன்மை இருக்கிறதோ அது மட்டும்தான் கிடைக்கும் என கூறுகின்றனர்.
மாம்பழத்தின் தோல், பல சமயங்களில் இறுகியதாக இருக்கும். இதனை இலகுப்படுத்துவதற்காக சிலர் தண்ணீரில் ஊற வைப்பர்.. சில சமயங்களில், ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்துவதற்காகவும், அவை அழுகாமல் இருப்பதற்காகவும் சில செயல்முறைகளுக்கு உள்ளாக்கப்படுமாம். எனவே, அவற்றில் இருந்து எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக இதனை சிலர் தண்ணீரில் ஊற வைப்பார்களாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ