)
Vivek Express News: ரயில் பயணம் என்பது அனைவரது வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பயணமாக திகழ்கிறது. ரயில் பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து எழில் கொஞ்சும் இயற்கை சூழலை பார்த்துக் கொண்டே செல்வதெல்லாம் ஒரு மிகப்பெரிய சொர்கம் என்றே சொல்லலாம்.
அதற்காகத் தான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இயற்கைகளை ரசித்தவாறே பயணம் மேற்கொள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கான நீண்ட தூர ரயில் பயணத்தை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட பல ரயில்களில் ஒரு ரயில் மட்டும் இன்றளவும் வரலாற்றை பேசுகிறது. அப்படி ஒரு ரயிலை பற்றி தான் இப்போது நாம் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கவும், பணி நிமித்தமாக மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும் புலம் பெயர் தொழிலாளர்களின் வேண்டுதலுக்கு இணங்கவும் இந்த ரயில் தொடங்கப்பட்டது. முக்கியமாக இந்த ரயிலானது விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களையும் தென்னிந்திய மாநிலங்களையும் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை இன்றளவும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணிகளின் வரவேற்பை பார்த்த ரயில்வே அமைச்சகம் அடுத்தடுத்த 3 நீண்ட தூரம் சேவையாற்றும் ரயிலை விவேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயே அறிமுகப்படுத்தினர்.
ஆகிய இந்த 4 ரயில்களும் நீண்ட தூர ரயில் பயணங்களுக்காக அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமாக கன்னியாகுமரி - திப்ரூகர் ரயில் தான் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி அஸ்ஸாமின் திப்ரூகர் வரையிலும் (வண்டி எண்:22503) அதே போல திப்ரூகரில் தொடங்கி கன்னியாகுமரியில் முடியும் (வண்டி எண்:22504) இந்த ரயில் பயணத்திற்கான பயணக் கட்டணங்கள் தூரத்திற்கு தகுந்தவாறு மாறுபடுகின்றன.
திப்ரூகர் முதல் கன்னியாகுமரி வரையிலான கட்டணங்கள்
கன்னியாகுமரி - திப்ரூகர் வரையில் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில் ஒவ்வொரு மாநிலத்திற்குள் நுழையும் பொழுதும் அந்த மாநிலத்தின் மண், மக்கள், உடை, உணவு பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறுபடுகின்றன.
இவ்வாறு மாறுபட்டவையாக அமைந்தாலும் இதில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த பயண அனுபவம் ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறிவிடுகிறது. அவ்வளவு சுவாரசியங்கள் நிறைந்த காட்சிகள் இந்த ரயில் பயணத்தில் இடம்பெற்றிருக்குதுனே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் இயற்க்கை காட்சிகள் மாற மலை, காடுகள், பள்ளத்தாக்குதல், காலநிலை மாற்றம் இவை அனைத்தையும் நிவர்த்தி செய்வது ஜன்னல் ஓர பயணம் மட்டுமே. இந்திய முழுவதிலும் புது புது இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிற ‘டிராவல் வ்லாகருக்கு’ இந்த ரயில் வரப்பிரசாதமே.
சுமார் 4,155 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்களில், அதாவது 75 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. 12 மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில் சுமார் 55 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில் திருவனந்தபுரம், கோயம்புத்தூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஷ்வர், நியூ ஜல் பைகுரி, கவுகாத்தி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 6 ரயில் நிலையங்கள்.
இந்த முழு பயணத்தின்போது பயணிகள் ரயிலில் இருந்து இறங்காமலேயே இந்தியாவின் இயற்கை, மொழி, உணவு, கலாச்சாரம், காலநிலையின் வியத்தகு மாற்றங்களை நேரடியாக அனுபவக்கின்றனர். காலை நேரத்தில் அசாமின் தேயிலை தோட்ட தேநீரில் தொடங்கி, சில மணி நேரங்களில் பெங்காலி உணவுகள், ஒடிசாவின் கடலோர உணவுகள், ஆந்திராவின் காரசாரமான உணவுகள் மற்றும் தமிழ் மண்ணின் பாரம்பரிய சுவையான உணவுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி சுவைகள் என மாறிக்கொண்டே செல்லும். இந்த ஒரே ஒரு ரயில் பயணத்தில் இந்தியாவின் பல மொழிகள், பல உணவு வகைகள், பல வகையான மனிதர்கள் என ஒரு சிறிய இந்தியாவையே பயணிகளுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கிறது.
மூன்று நாட்களுக்கு தொடரும் இந்த ரயில் பயணத்தில் பயணிகளால் எடுக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அவ்வப்போது வைரலாகிறது. குறிப்பாக ஜன்னலுக்கு வெளியே மாறிக்கொண்டே செல்லும் ரம்மியமான இயற்கை காட்சிகள், மழை சூழ்ந்த வடகிழக்குப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் இன்னும் ஏராளம் சொல்லிக் கொண்டே செல்லலாம். குறிப்பாக இந்த ரயிலில் மட்டும் ஜன்னல் ஓர இருக்கைகள் கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த விவேக் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பயணிகளின் வரவேற்பை பார்த்து அடுத்தடுத்து வாரத்தில் இயங்கும் நாட்களை அதிகரித்து, தற்போது வாரத்தில் அனைத்து நாட்களும் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கும், திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கும் ரயில் இயக்கப்படுகின்றது.
இதனால் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அடுத்தடுத்து கொண்டுவரப்பட்ட ரயில்கள் எவ்வளவு தான் வேகமாக நேரத்திற்கு சென்றாலும் அதில் நேரத்தை தான் மிச்சப்படுத்தப்படுமே தவிர, பயணிகளின் மன திருப்தியை திருப்திபடுத்தமுடியாது என்பது உண்மைதானே. ஆம், தற்போது முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், அதிவேக ரயில்கள் போன்றவைகள் நேரத்திற்கு செல்பவைகளாகவும், குறிப்பாக வந்தே பாரத்தில் சென்றால் கூடுதலாக நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்றே பயணிகள் நினைக்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு தெரியாது இது போன்ற குறைந்த வேகம் கொண்ட ரயிலில் பயணிப்பது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று. இது போன்ற அதிவேக ரயில்களில் பயணிப்பதன் மூலம் வெளியில் தெரியும் இயற்கை சூழலை ரசிக்க முடியாத நிலை உருவாகிறது. அதனை இது போன்ற நீண்ட தூர ரயில்கள் தான் நிவர்த்தி செய்கின்றன. இது போன்ற நீண்ட தூர ரயில்களில் வந்தே பாரத் போன்ற ரயில்கள் எல்லாம் தோற்றே போகும் எனலாம்.