டோல்கேட்டே இனி இருக்காது, FASTag முறையும் ரத்து - இந்தியாவில் வரப்போகும் புதிய சுங்கச்சாவடி முறை..!!

Toll Gate Removal India : இந்தியாவில் சுங்கச்சாவடி வசூலிப்பதில் அட்வான்ஸ் டெக்னாலஜியை மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால்  டோல்கேட்டுகளே எதிர்காலத்தில் டோல்கேட்டுகளே இருக்காது. FASTag முறையும் ரத்தாகும்.   

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 13, 2025, 01:21 PM IST
  • இந்தியாவில் டோல்கேட்டுகள் விரைவில் நீக்கம்
  • பாஸ்டேக் முறையும் விரைவில் ரத்தாகப்போகிறது
  • ஜிபிஎஸ் கருவிகள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிப்பு
டோல்கேட்டே இனி இருக்காது, FASTag முறையும் ரத்து - இந்தியாவில் வரப்போகும் புதிய சுங்கச்சாவடி முறை..!!

Toll Gate Removal India, FASTag Cancellation : இந்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் பெரும் மாற்றத்தை செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது. சுங்கச்சாவடி வசூலில் கொண்டுவரப்படப்போகும் இந்த அட்வான்ஸ் மற்றும் அதிரடி மாற்றங்களால் டோல்கேட்டுகளுக்கு இனி வேலை இல்லை, FASTag முறையும் ரத்தாகப்போகிறது. அதேநேரத்தில் எல்லோரும் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களை பயன்படுத்த தயாராகிக் கொள்ள வேண்டும். சுங்கக் கட்டணம் எல்லாம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு நீங்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படப்போகிறது. இதன் மூலம் அநாவசியமாக அதிக கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. சுங்கச்சாவடிகளில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படாது. 

Add Zee News as a Preferred Source

FASTag ஏன் மாற்றப்படுகிறது?

சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதை குறைக்கும் வகையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும்முறையை அண்மையில் மாற்றியது மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம். நாடு முழுவதும் எல்லா வாகனங்களும் FASTag முறைக்கு மாறின. இதன் மூலம் சீக்கிரம் சுங்கக்கட்டணம் செலுத்தப்பட்டு, சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதை குறைக்க முடிந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடிந்தது. அதேநேரத்தில் இதனால் முழுமையான தீர்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. FASTag முறை வழியே சுங்கக்கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. போக்குவரத்து நெரிசலும் கணிசமான அளவிலேயே குறைக்க முடிந்திருக்கிறது. இதனை பார்த்த மத்திய அரசு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஜிபிஎஸ் முறையை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. 

ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?

ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கச்சாவடி அமைப்பு என்பது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களைக் கண்காணித்து உண்மையான தூரத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இதற்கு செயற்கைக்கோள் உதவியுடன் வழிகாட்டல்கள் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு மேம்பட்ட ANPR கேமராக்கள் மற்றும் வாகனங்களில் நிறுவப்பட்ட GPS அமைப்புகள் மூலம் இயக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் மூலம் என்ன நன்மை கிடைக்கும்?

சுங்கச்சாவடி தாமதங்கள் அறவே இருக்காது. துல்லியமான மற்றும் தூர அடிப்படையிலான சுங்கக் கட்டணங்களை உறுதி செய்யப்படும். சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் ஊழல்கள் மற்றும் மனித தவறுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பிக்சிடு கட்டணங்கள் இல்லாமல், கிலோ மீட்டர்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. வாகன கண்காணிப்பு இருக்கும். வங்கிக் கணக்குடன் ஜிபிஎஸ் இணைக்கப்பட்டு அந்த நொடியில் சுங்கக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு தானியங்கி (Automatic) முறையில் வசூலிக்கப்படும்.

புதிய சுங்கச்சாவடி அமைப்பு எவ்வாறு செயல்படும்?

புதிய சுங்கச்சாவடி அமைப்பின் கீழ், வாகனங்கள் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்கள் நெடுஞ்சாலைகளில் என்ட்ரியாகும்போது தானாகவே நெடுஞ்சாலைத்துறை ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்துவிடும். நெடுஞ்சாலையில் இறங்கும்போது இந்த இணைப்பு தானாக துண்டித்துக் கொள்ளும். அதற்கேற்றார்போல் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும். இதற்குஏற்றார்போல் தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. இந்த செட்டிங்களூக்கு ஏற்றார்போல் ஜிபிஎஸ் கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வர இருக்கும் வாகனங்களில் பொருத்தப்பட உள்ளது. ஜிபிஎஸ் இல்லாத வாகனங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற ஜிபிஎஸ் கருவிகளை வாங்கி பொருத்திக்கொள்ளலாம். 

எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது?

ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை மே 1 ஆம் தேதி முறை அமலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. முதலில் பல்வேறு சாலைகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு பின்னர் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. 

தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு பற்றி என்ன?

அதேநேரத்தில் GPS கண்காணிப்பு என்ற இந்த முறை நடைமுறைக்கு வந்தால் பொதுமக்களின் பிரைவசி மற்றும் அவர்களின் தரவு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இருப்பினும் குறைந்தபட்ச மற்றும் அத்தியாவசிய இருப்பிடத் தரவு மட்டுமே சுங்க நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும், ஒப்புதல் இல்லாமல் பகிரப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இந்த நடைமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூல் நடைமுறைக்கு வரும் நெடுஞ்சாலைகள்:

1. டெல்லி-மும்பை விரைவுச்சாலை
2. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலை
3. தங்க நாற்கர வழித்தடங்கள்
4. டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
5. கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச்சாலைகள்

இந்தியா FASTag-லிருந்து GPS அடிப்படையிலான சுங்கச்சாவடிக்கு மாறுவது எதிர்காலத்திற்கான, டிஜிட்டல் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்தமுயற்சி பில்லியன் கணக்கான எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் அனைத்து சாலை பயனர்களுக்கும் நியாயமான சுங்கக் கட்டண வசூலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News