)
Indian Railways Rules: இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களில் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், பயணிகள் கன்பார்ம் டிக்கெட் வைத்து ரயிலை தவறவிட்டால், அதற்கு விதி என்ன? உங்களுக்கும் இது தொடர்பான விதி தெரியவில்லை என்றால், இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். பெங்களூருவில் உள்ள ஹூடியைச் சேர்ந்த வயதான தம்பதியினரான பூர்ணா ராமகிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ஹேமாவதி ஆகியோருக்கு ஏப்ரல் 2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒன்று சம்பவம் நடந்தது. இதன் பிறகு, அவர்கள் மூன்று ஆண்டுகள் ரயில்வேக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி தற்போது வெற்றி பெற்றனர். உண்மையில், இந்த சம்பவம் ஏப்ரல் 13, 2022 அன்று, கூட்ட நெரிசல் காரணமாக தம்பதியினர் முன்பதிவு செய்யப்பட்ட ரயிலின் பெட்டியில் ஏற முடியவில்லை போனது. இதன் பிறகு, பணத்தைத் திரும்பப் அதாவது ரீஃபண்ட் பெற அவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
ரயில் இரவு 11:53 மணிக்கு வந்து 2 நிமிடங்கள் மட்டுமே நிலையத்தில் நின்றது:
கடந்த ஏப்ரல் 13, 2022 அன்று, பூர்ணா ராமகிருஷ்ணா மற்றும் ஹேமாவதி ஆகியோர் குவஹாத்தி எக்ஸ்பிரஸில் பயணிக்க பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் (கேஜேஎம்) நிலையத்தை அடைந்தனர். இருவரும் விஜயவாடாவிற்கு ரூ.892.5 மதிப்புள்ள ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளை எடுத்து இருந்தனர். இந்த இரண்டு டிக்கெட்டும் கன்பார்மாக இருந்தது. ஆனால் அவர்களின் முன்பதிவு செய்யப்பட்ட S2 பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் ரயிலில் ஏற முடியாமல் போனது. மேலும் அங்கு வந்த ரயில் இரவு 11:53 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்றது. இதனால் அந்த தம்பதியினர் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பணத்தைத் திரும்பப் பெற ரயில்வேக்கு பல முறை மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். ஆனால் ரயில்வே பணத்தைத் திரும்பப் தரவோ அல்லது எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதன் பிறகு, அவர்கள் நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் ரயில்வே பதிலளிக்கவில்லை. கடந்த ஜூலை 1, 2023 அன்று, ஆணையம் புகாரை நிராகரித்தது. இதன் பிறகு, தம்பதியினர் மாநில நுகர்வோர் ஆணையத்தை அணுகினர். வழக்கை விசாரிக்க மாநில ஆணையம் உத்தரவிட்டது.
ரயில்வேயின் தவறு காரணமாக தம்பதியினரின் பிளான் வீணானது
ரயிலைத் தவறவிட்டதால் தம்பதியினர் தங்கள் எதிர்காலத் திட்டங்களில் பெரிய நஷ்டத்தை சந்தித்தனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் அடுத்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இது தவிர, ஏப்ரல் 21 ஆம் தேதி திரும்பும் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. ரயில்வேயின் தவறு காரணமாக அவர்களின் முழு பிளானும் வீணானது. தம்பதியினரின் கூற்று 'தவறானது மற்றும் ஆதாரமற்றது' என்று தென்மேற்கு ரயில்வே கூறியது. அன்று இரவு கேஜேஎம் நிலையத்திலிருந்து 134 பயணிகள் ரயிலில் ஏறியதாக ரயில்வே தெரிவித்தது. தம்பதியினரைத் தவிர, கூட்டம் அதிகமாக இருப்பதாக யாரும் புகார் அளிக்கவில்லை. ரயில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டதாகவும், கோவிட்-19க்குப் பிறகு முன்பதிவு செய்யப்படாத பயணம் மீண்டும் தொடங்கியதாகவும் ரயில்வே தெரிவித்தது. தம்பதியினர் ரயிலில் ஏறாமல் இருப்பது அவர்களின் 'தனிப்பட்ட முடிவு' என்று ரயில்வே தெரிவித்து இருந்தது.
ரயில்வேயின் கடிதத்தால் ஏற்பட்ட மாற்றம்:
இந்த வழக்கில் ஒரு முக்கியமான ஆதாரம் முழு வழக்கையும் மாற்றியது. மே 6, 2022 தேதியிட்ட ரயில்வேயின் கடிதம் இருந்தது, அதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது அதிகரித்தது ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்குமாறு அறிவுறுத்தியது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, மார்ச் 2025 இல், கமிஷன் தம்பதியினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ரயில்வேக்கு சேவை குறைபாடு மற்றும் மன துன்புறுத்தலுக்காக ரூ.5000 மற்றும் வழக்குச் செலவுகளாக ரூ.3,000 ஆகியவற்றைத் திருப்பித் தர உத்தரவிடப்பட்டது.
விதி என்ன சொல்கிறது?
இந்த முழு வழக்கின் விசாரணையின் போது, பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதும், கடினமான காலங்களில் அவர்களுக்கு உதவுவதும் ரயில்வேயின் கடமை என்று ஆணையம் கூறியது. இந்த தம்பதியனர் தொடர்ந்த இந்த வழக்கு ஒரு உதாரணமாக முன்வந்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கூட்டம் காரணமாக ஒரு பயணி ரயிலில் ஏற முடியாவிட்டால், பயணி பொறுப்புக்கூறலைக் கோரலாம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
பயணி ரயிலில் ஏற முடியாவிட்டால் என்ன விதி?
கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பயணி ரயிலில் ஏற முடியாவிட்டால், அவர் டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR) தாக்கல் செய்யலாம். ரயில் புறப்படும் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, இந்தப் புகாரைப் பதிவு செய்யலாம். TDR-ஐ தாக்கல் செய்ய, பயணி IRCTC இணையதளத்தில் அல்லது டிக்கெட் கவுண்டரில் விண்ணப்பிக்க வேண்டும்.
எப்போது பணம் திரும்பப் கிடைக்கும்?
ரயில்வே சேவையில் குறைபாடு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால், ரயில்வே பணத்தைத் திரும்பப் பெறலாம். இருப்பினும், பயணிகள் ரயிலில் ஏறவில்லை என்பது 'தனிப்பட்ட காரணங்களுக்காக' எனக் கருதப்பட்டால், ரயில்வே விதிகளின் கீழ், குறிப்பாக உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ