)
Indian Railway Food Prices Hike: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது இந்தியன் ரயில்வே. ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில், நாடு முழுவதும் தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளையும் ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
குறிப்பாக, ரயில் பயணிகளுக்காக ரயில்களில் உணவும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கக் கூடிய வகையில், குறைந்த விலையில் உணவுகள் ரயில்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர், ஸ்நாக்ஸ், காலை உணவு, மதிய உணவு என அனைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ரயில் நிலையங்களிலும் ஐஆர்சிடிசி உணவு கடைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரயில் உணவுகளின் விலை ஜூன் 1 முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள சிறிய அளவிலான உணவுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான விலையை மத்திய ரயில்வே திருத்தியுள்ளதுரு. இந்த புதிய விலை உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய கட்டணத்தின்படி, இனி 50 கிராம் கொண்ட ஒரு ஆலு வடைக்கு ரூ.15 செலுத்த வேண்டும். அதே நேரத்தில், அதனுடன் வழங்கப்படும் பாவ் தனியாக ரூ.5 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட உணவுப் பட்டியலில் பொதுவாக வழங்கப்படும பல தின்பண்டங்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெஜ் சமாசோ, வெஜ் பஃப், ஜவ்வரிசி வடை ஆகியவற்றின் விலை தலா ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனமான உணவு வகைகளில், வெஜ் பீட்சாவிற் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு இணையாக பாவ் பாஜியின் விலை இனி ரூ.50 ஆக இருக்கும். விலை உயர்வு பட்டியலில் தென்னிந்திய உணவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மசாலா தோசையின் விலை ரூ.35 ஆகவும், சாம்பார் மற்றும் சட்னியுடன் கூடிய இரண்டு இட்லிகளின் விலை இனி ரூ.30 ஆக இருக்கும் என மத்திய ரயில்வ தெரிவித்துள்ளது. இந்த உணவுகளின் விலை மாற்றப்பட்டாலும், பெரும்பாலான உணவுகளின் விலைகள் மாற்றப்படவில்லை. அதன்படி, மிசல் பாவ் தொடர்ந்து ரூ.35 விலையும், கச்சோரி ரூ.15 விலையும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் செயல்படும் உணவு கடைகளில் உணவு விலைகளைத் தரவு உயர்த்துவதே விலை உயர்வுக்கான நோக்கம் என ரயில்வே அதிகாரிகள தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட உணவு கட்டணங்களுடன், ரயில் நிலையக் கடைகளில் சுதாதாரத்தையும், உணவின் தரத்தையும் மேம்படுத்துமாறு விற்பனையாளர்களுக்கு மத்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் உணவு விலைகளை பல்வேறு மொழிகளில் தெளிவாக பார்க்கும் வகையில், அனைத்து உணவுக் கடைகளிலும் இருமொழி விலைப்பட்டியல்களைத் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், திருத்தப்பட்ட விலையை கடைப்பிடிப்பதையும், உணவின் தரம் குறித்து உறுதி செய்வதற்கான குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் விலை உயர்வு என்பது உணவின் தரத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
| உணவுகள் | விலை பட்டியல் |
| ஆலு வடை (50 கிராம்) | ரூ.15 |
|
பாவ் |
ரூ.5 |
| வெஜ் சமோசா | ரூ.20 |
| வெஜ் பஃப் |
ரூ.20 |
| ஜவ்வரிசி வடை | ரூ.20 |
| பாவ் பாஜி | ரூ.50 |
| வெஜ் கட்லட் | ரூ.50 |
| மசாலா தோசை |
ரூ.35 |
| 2 இட்லி, சாம்பார் | ரூ.30 |
| மிசால் பாவ் | ரூ.35 |
மத்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூன் 1 முதல் உணவு விலைகளில் உயர்வு அமலாகும்.
ஆலு வடை, வெஜ் சமோசா, வெஜ் பஃப், ஜவ்வரிசி வடை, பாவ் பாஜி, இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலை உயருகிறது.
மத்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, உணவின் தரத்தை உயர்த்துவதற்காக தான் உணவு விலை உயர்த்தப்பட்டதாக விளக்கம்.