)
Indian Railway Tatkal Booking Rules: நாட்டில் தினம்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பயணிகளுக்காக ரயில்வே அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்கி வருகிறது. பலர் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு தங்கள் டிக்கெட்டுகளை தாங்களாகவே முன்பதிவு செய்கிறார்கள். பல நேரங்களில், சாதாரண டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால், மக்கள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அத்தகைய சூழிலையில் நீங்கள் அடிக்கடி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. தட்கலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பாக இந்திய ரயில்வே பல விதிகளை மாற்றியுள்ளது. இந்த விதிகளின் கீழ், முன்பதிவு வரம்பும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், இதற்கு ஆதார் அங்கீகாரம் அவசியமாகிவிட்டது. அதாவது, உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் போகும். எனவே தற்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறி தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ரயில்வே இப்போது ஒரு புதிய வரம்பை நிர்ணயித்துள்ளது. அதாவது, இனி வரும் காலங்களில் எந்த நபரும் தட்கல் டிக்கெட்டுகளை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறைக்கு மேல் முன்பதிவு செய்ய முடியாது. மோசடியான முறையில் பல டிக்கெட்டுகளை அடிக்கடி முன்பதிவு செய்பவர்களுக்காக இந்த விதி குறிப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது யாரும் தட்கலில் ஒரு நாளைக்கு இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அதிகபட்சம் 4 பயணிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை ஒரு டிக்கெட்டில் அதாவது ஒரு PNR இல் முன்பதிவு செய்யலாம். இரண்டு டிக்கெட்டுகளில் அதிகபட்சம் 8 பயணிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
வரம்பை மீறி அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் மற்றொரு கணக்கைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அல்லது நீங்கள் கவுண்டரில் இருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டி இருக்கும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
ரயில்வேயின் இந்த புதிய விதிகள் கடந்த ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போது நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நினைக்கும் போது. முதலில் இந்த விதிகளை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ