Tatkal Ticket Booking : IRCTC வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு.. பயணிகளுக்கு ஜாக்பாட்

Tatkal Ticket Booking- ஜூலை 1 முதல் உடனடி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பதை ரயில்வே கட்டாயமாக்கியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 29, 2025, 03:35 PM IST
  • இதுவரை 10% பயனர்கள் மட்டுமே தங்கள் கணக்குகளை ஆதாருடன் இணைத்துள்ளனர்.
  • சுமார் 2.2 லட்சம் பயணிகள் irctc வலைத்தளம் மற்றும் செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
Tatkal Ticket Booking : IRCTC வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு.. பயணிகளுக்கு ஜாக்பாட்

Indian Railways Tatkal Ticket Booking : ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், அவசர காலங்களில் தேவைப்படும் பயணிகளுக்கு சரியான நேரத்தில் டிக்கெட்டுகளை வழங்கவும் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில்வே புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. 

Add Zee News as a Preferred Source

சில நாட்களுக்கு முன்பு ரயில்வே (Indian Railway) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஐஆர்சிடிசி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்காத பயணிகள் இனி ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் தங்களுக்கான தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று ரயில்வே கூறியிருந்தது. அதன்படி தற்போது ஐஆர்சிடிசி கணக்கை ஆதார் அட்டை (Aadhaar Card) அல்லது வேறு சில அடையாள அட்டைகளுடன் சரிபார்ப்பதன் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ​​ஐஆர்சிடிசியின் சுமார் 13 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களில், 10% க்கும் அதிகமானோர் மட்டுமே தங்கள் கணக்குகளை ஆதாருடன் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிலாக்கரில் உள்ள பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் ஐடி போன்ற பிற ஆவணங்களையும் பயனர் அங்கீகாரத்திற்காக சேர்க்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் திங்கட்கிழமை அன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிடக்கூடும். இந்த முக்கிய முடிவானது வெள்ளிக்கிழமை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தினந்தோறும் 2.2 லட்சம் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர்
தற்போது, ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் செயலி மூலம் தினந்தோறும் 2.2 லட்சம் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். ஐஆர்சிடிசி பயன்பாடு மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு தங்கள் ஐஆர்சிடிசி கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது, இதனால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. ஜூலை 15 முதல், ஆதாருடன் இணைக்கப்பட்ட OTP ஒவ்வொரு தட்கல் முன்பதிவிலும் உள்ளிடப்பட வேண்டும், இதனால் முன்பதிவு செய்யும் போது பயனரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.

கள்ளச் சந்தைப்படுத்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள்
போலி முகவர்கள் மூலம் டிக்கெட்டுகளை கருப்புச் சந்தைப்படுத்துவதை நிறுத்தவும், அவசரகாலத்தில் தேவைப்படும் பயணிகளுக்கு சரியான நேரத்தில் டிக்கெட்டுகளை வழங்கவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தட்கல் டிக்கெட்டுகளை இப்போது ஆதார் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு அல்லது இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பிஆர்எஸ் கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மேலும் படிக்க | ஜூலை 1 முதல் இந்திய ரயில்வே விதிகளில் மாற்றம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்

மேலும் படிக்க | Jagannath Rath Yatra: பூரி ஜெகன்நாதர் கோயில் செல்லனுமா? ஆன்மீக டூர் டிக்கெட் விலை ரொம்ப கம்மி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News