பொரும்பாலானோர் எப்போதும், பாதுகாப்பு மற்றும் சிறந்த வருமானம் ஆகிய இரண்டையும் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். இதனால், வருங்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டும் பாதுகாப்பானதாக இருக்கும் என நம்புகிறார்கள். இதன் மூலம் அவர்கள் பம்பர் நன்மைகளைப் பெற முடியும். தற்போது, மக்களுக்கு பாதுகாப்பையும் வருமானத்தையும், பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அங்கு முதலீடு செய்வதன் மூலம் பெரிய பணம் சம்பாதிக்கும் உங்கள் கனவை நீங்கள் நிறைவேற்றலாம். அதற்காக சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். தபால் அலுவலகத்தில் ஒரு சிறந்த திட்டம் உங்களுக்கு மேலே கூறிய அம்சங்கள் அனைத்தையும் வழங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஞ்சலகத்தின் அசத்தலான திட்டத்தில் சேர்ந்து நீங்களும் எதிர்காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்கும் உங்கள் கனவை நிறைவேற்றலாம். வீட்டில் அமர்ந்து கொண்டே சம்பாதிக்கும் கனவை நிறைவேற்ற, அஞ்சல் அலுவலகத்தின் திட்டத்தில் சேர வேண்டியது அவசியம். அதில் நீங்கள் சிறிய அளவில் முதலீடு செய்தால் போதும்.


வருமானத்தை அள்ளித் தரும் தபால் அலுவலக திட்டம் 


நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான தபால் அலுவலகத்தின் திட்டங்கள், மிகவும் பாதுகாப்பானவை என்பதோடு, அவை மக்களின் முதலீட்டிற்கான முதல் தேர்வாக உள்ளன. அதில் நீங்கள் கொஞ்சம் முதலீடு செய்தால் போதும். தபால் அலுவலகத்தின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் அனைவரும் மிகவும் பிடித்தமான திட்டமாக உள்ளது.


இந்த முதலீட்டைச் செய்வதன் மூலம் நீங்கள் பணத்தை பன்மடங்காக்கலாம். அதற்காக சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் திட்டங்களில் சேர்வதன் மூலம், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் கனவை நிறைவேற்றலாம், அதற்காக முதலில் கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டும்.


போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய்


அரசு நிறுவனமான தபால் அலுவலகத்தின்  வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்து, முதலீடு செய்வதன் மூலம் பெரும் நிதியை சேகரிக்க முடியும். இதில் நீங்கள் நாள் ஒன்றுக்கு 15 ஆண்டுகளுக்கு ரூ.166 முதலீடு செய்தால் போதும். அது பன்மடங்காக பெருகி, 15 ஆண்டுகளுக்கு பின் ரூ.16 லட்சம் நிதியை எளிதாகப் பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதி என்பது பாதுகாப்பான முதலீட்டிற்கான சிறப்பு திட்டமாகும். இன்று, அஞ்சல் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | வங்கியில் கடன் வாங்க திட்டமா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!


தற்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும். மறுபுறம், முதலீட்டு திட்டத்தில் ரூ.166 சேமித்தால், உங்களுக்கு ரூ.16 லட்சத்து 27 ஆயிரம் நிதி கிடைக்கும். அதன்படி, ஒவ்வொரு மாதமும்  நாளொன்றுக்கு ரூ.166 முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டம் 15 ஆண்டுகள் நிறைவடையும் போது  உங்களுக்கு மொத்தம் ரூ.16,27,284 கிடைக்கும்


தபால் அலுவலக திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ.500 பிரீமியம் செலுத்தக் கூடிய திட்டங்களும் உள்ளன. அதே சமயம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். உங்கள் அருகிலுள்ள தபால் நிலைய மையத்திற்குச் சென்று உங்கள் கணக்கைத் திறக்கலாம்.  அரசாங்கத்தால் பணத்தை பன்மடங்காக்கும் பல சூப்பரான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் சேருவதன் மூலம் மக்கள் பெரும் நிதியைப் பெற்று வயதான காலத்தில் வருமானம் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள்.


மேலும் படிக்க | Valentine Day 2023: காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ