எண்ணெய் முகம் பிசு பிசுன்னு இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Oily Skin Care Tips: உங்கள் சருமம் மிகவும் எண்ணெய் பசையுடன் இருந்தால் இந்த 3 வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 18, 2025, 08:14 PM IST
  • மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை
  • மஞ்சள், கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
  • மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் சிகிச்சை
எண்ணெய் முகம் பிசு பிசுன்னு இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Oily Skin Care Tips in Tamil: எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கோடையில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். முகம் ஒட்டும் தன்மையுடன் இருக்கும், துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் தோன்றத் தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சில வீட்டுப் பொருட்களை மஞ்சளுடன் கலந்து இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் தடவினால், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறத் தொடங்கும். ஏனெனில் மஞ்சளில் நிறைந்திருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இந்நிலையில் மஞ்சளுடன் கலந்து எந்த மூன்று பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். 

மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை
கற்றாழை சருமத்திற்கு ஒரு அதிசய மருந்தாகக் கருதப்படுகிறது. இது குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. கற்றாழை மற்றும் மஞ்சள் கலந்த பேக் பயன்படுத்தி வந்தால் பருக்களை கட்டுப்படுத்தலாம் மற்றும் சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவும். இதற்காக, ஒரு சிட்டிகை மஞ்சளை ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் கலந்து இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் அதிக எண்ணெய் பசையாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறை இந்த பேக்கைப் பயன்படுத்தவும்.

மஞ்சள், கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
இந்த பேக் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும் என்று அறியப்படுகிறது. கடலை மாவு முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. மஞ்சள் இந்த பேக்கிற்கு ஒரு கிருமி நாசினி விளைவை அளிக்கிறது. இது சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவில் அரை டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து ஒரு பேஸ்ட் வடிவில் தயாரித்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, அவை காய்ந்த பிறகு, லேசான கைகளால் மசாஜ் செய்து கழுவவும்.

மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் சிகிச்சை
முகத்தில் முகப்பரு புள்ளிகள் அல்லது தழும்புகள் இருந்தால், மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக, ஒரு சிட்டிகை மஞ்சளில் இரண்டு முதல் மூன்று சொட்டு ரோஸ் வாட்டர் கலந்துக் கொள்ளவும், இந்த கலவையை தழும்புகள் உள்ள பகுதியில் மட்டும் தடவவும். இந்த மருந்தை இரவு முழுவதும் முகத்தில் விட்டுவிட்டு, மறுநாள் காலையில் எழுந்தவுடன் கழுவவும். இதன் மூலம், தழும்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும், மேலும் தோல் சுத்தமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பருப்புகளை நொதிக்க செய்வதால்... இரட்டிப்பாகும் ஊட்டச்சத்துக்கள்... ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

மேலும் படிக்க |  கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News