)
Navratri Celebration 2025: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி தொடங்கப் போகிறது. இந்த பண்டிகை நாளை அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
நவராத்திரி என்பது துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்களை வணங்கும் ஒரு முக்கியமான பண்டிகை. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வடிவம் பூஜிக்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு நவராத்திரி வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. இந்த பண்டிகையின் போது வணங்கப்படும் துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்:
நவராத்திரியின் முதல் நாளில் ஷைலபுத்ரி தேவி வழிபடப்படுகிறாள். துர்க்கை அம்மனின் முதல் வடிவம் இவள். மலை அரசனான இமவான் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.
சந்திரகாண்டா தேவி, பார்வதியின் திருமணமான அவதாரம். நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னை வணங்கப்படுகிறார்.
கூஷ்மாண்டா தேவி, சூரிய மண்டலத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தேவி, எட்டு கைகளைக் கொண்டவளாதலால், அஷ்டபுஜா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள். நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று 'கூஷ்மாண்டா' வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.
ஸ்ரீ ஸ்கந்த மாதா, நவராத்திரி விழாவின் 5ம் நாளில் வணங்கப்படுகின்றாள். பார்வதி தேவி, ஸ்கந்தனின் தாயாக மாறியபோது, அவர் ஸ்கந்தமாதா என்று அழைக்கப்பட்டார்.
மகிஷாசுரனை அழிக்க, பார்வதி தேவி காத்யாயனி தேவியாக உருவெடுத்தாள். நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனியை வழிபடுவது வழக்கம். இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.
நிசும்பன் அரக்கர்களைக் கொல்ல, பார்வதி தேவி தனது தங்கத் தோலை அகற்றியபோது, அவள் காளராத்திரி தேவி என்று அழைக்கப்பட்டாள். நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாளில் 'காளராத்திரி' யை வழிபடுவது வழக்கம்.
மஹாகௌரி தேவி, வெண்ணிற ஆடைகளை மட்டுமே அணிவதால், ஸ்வேதாம்பரதாரா என்றும் அழைக்கப்படுகிறாள். மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும்.
சிவபெருமானின் இடது பாதியில் இருந்து சித்திதாத்ரி வடிவத்தில் தோன்றினாள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் 'சித்தி தாத்ரி' துர்க்கை வழிபாடு செய்வர்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ