RBI New Currency : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வாய்க்கிழமை, ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த நோட்டுகளில் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இருக்கும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது " புதிய நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி புகைப்படத்துடன் ரூ.100, ரூ.200 தாள்கள் இருக்கும். அதேநேரத்தில் ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்ட அனைத்து ₹100 மற்றும் ₹200 நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் விளக்கமளித்துள்ளது. அதனால் புதிய ரூபாய் தாள்கள் வருகையால் பழைய ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாதா என்ற கேள்வி மற்றும் சந்தேகம் தேவையில்லை.
மேலும், ரிசர்வ் வங்கி ரூ.50 நோட்டையும் விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த நோட்டிலும் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இருக்கும். டிசம்பர் 2024-இல் ஷக்திகாந்த தாஸ் பதவி விலகிய பிறகு, சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய கவர்னராக பதவியேற்றார். ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியது, "இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரின் ₹50 நோட்டுகளுக்கு ஒத்திருக்கும்." என தெரிவித்துள்ளது.
பழைய நோட்டுகளுக்கு என்ன ஆகும்?
புதிய 50 ரூபாய் தாள்கள் வந்த பிறகு பழைய நோட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று RBI தெரிவித்துள்ளது. அனைத்து பழைய 50 ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
சஞ்சய் மல்ஹோத்ரா யார்?
சஞ்சய் மல்ஹோத்ரா 1990-ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேடரின் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி. இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), கான்பூரில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் பொது கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 33 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணி வாழ்க்கையில் தலைமை மற்றும் சிறப்பு பண்புகளை வெளிப்படுத்திய சஞ்சய் மல்ஹோத்ரா, மின்சாரம், நிதி மற்றும் வரி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன், இவர் நிதி அமைச்சகத்தில் செயலாளர் (வருவாய்) பணியில் இருந்தார். மேலும், இந்திய அரசின் நிதி சேவைகள் துறையில் செயலாளராக பணியாற்றினார். இவர் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தில் நிதி மற்றும் வரி துறையில் பரந்த அனுபவம் கொண்டவர். தற்போதைய பணியில், நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான வரிக் கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
சஞ்சய் மல்ஹோத்ரா ஏன் RBI கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
சஞ்சய் மல்ஹோத்ரா நிதிச் சேவைகள் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இவர் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையில் செயலாளராக முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் வரி மற்றும் நிதி விஷயங்களில் ஆழமான அனுபவம் கொண்டவர். நிதிச் சேவைகள் துறையில் இவரது அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, சஞ்சய் மல்ஹோத்ராவை RBI கவர்னராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. புதிய நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்பதால், அவற்றின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









