இந்தியாவில் பாஸ்போர்ட் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு முக்கிய மாற்றம் செய்துள்ளது. அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இனி இவர்கள் பாஸ்போர்ட் பெற வேறு பிறந்த தேதிக்கான சான்றாக, வேறு எந்த ஆவணத்திற்கும் பதிலாக பிறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக, பள்ளியில் இருந்து வெளியேறும் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சான்றாக அங்கீகரிக்கப்பட்டது.
பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்கள்
இந்தியாவில் பாஸ்போர்ட் வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது, இதற்காக நாடு முழுவதும் 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. பாஸ்போர்ட் பெற, அடையாளச் சான்று, வசிப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது ஆதார் அட்டை ,பள்ளி வெளியேறும் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சான்றாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு இதில் மாற்றங்களைச் செய்து, அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழை மட்டுமே செல்லுபடியாகும் ஆவணமாகக் கருதுகிறது.
புதிய விதி யாருக்கெல்லாம் பொருந்தும்?
இந்த புதிய விதி அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படிப்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு, அது இல்லாமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதே சமயம், அக்டோபர் 1, 2023க்கு முன் பிறந்தவர்கள், ஓட்டுநர் உரிமம், பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ், பான் கார்டு, ஆதார் அட்டை போன்ற மாற்று ஆவணங்களை பிறந்த தேதிக்கான சான்றிதழாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மோசடிக்கான வாய்ப்பைக் குறைக்கும் நோக்கிலான விதி
அரசாங்கத்தின் விதி மாற்றத்தின் நோக்கம் பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையை மேலும் நெறிப்படுத்தப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதாகும். பிறப்புச் சான்றிதழைக் கட்டாயமாக்குவது ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து மோசடிக்கான வாய்ப்பைக் குறைக்கும். மேலும், இது பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையை மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்யும் முறை
பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தினை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK)அல்லது போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா (POPSK) ஆகியவற்றுக்குச் செல்லலாம். விண்ணப்பத்தை தொடர்ந்து போலீஸ் சரிபார்ப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. அதை வெற்றிகரமாக முடித்த பிறகு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு குட்நியூஸ்! இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









