இளம் வயதில் நரை முடி பிரச்சனையா? இந்த இயற்க்கை வைத்தியம் போதும்

Natural Remedies For White Hair: நரை முடியை கருப்பாக்க நாம் பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்திருப்போம். ஆனால் அவை நீண்ட நாட்களுக்கு பலன் தராது. எனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2025, 07:03 PM IST
  • இயற்கையாக முடியை கருப்பாக்கும் சிறந்த தீர்வு – மருதாணி + காபி!
  • ஆழமான கருப்பு நிறம் | ரசாயனங்கள் இல்லாத பாதுகாப்பான ஹேர் டை!
  • வலிமையும் பொலிவும் சேர்க்கும் முடிக்கான இயற்கை கலவை!
இளம் வயதில் நரை முடி பிரச்சனையா? இந்த இயற்க்கை வைத்தியம் போதும்

How To Blacken White Hair Naturally: இன்றைய வேகமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக, இளம் வயதிலேயே பலருக்கும் முடி நரைக்கும் பிரச்சனை உருவாகிறது. இதனால் பலர் தங்கள் தோற்றத்தில் மனவேதனைக்குள்ளாகின்றனர். ஆனால் இனி கவலைப்பட தேவையில்லை – இயற்கையாகவும், பாதுகாப்பாகவும் முடியை கருப்பாக்கும் பல தீர்வுகள் உள்ளன. அவற்றை பற்றி அறிந்துக் கொள்வோம்.

அதில் ஒன்று தான் மருதாணி மற்றும் காபி கலவை. இது உங்கள் முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீண்ட நாட்கள் நிறம் நீடிக்கவும் செய்கிறது.

ஏன் மருதாணியுடன் காபி சேர்த்து பயன்படுத்த வேண்டும்?
பொதுவாக, மருதாணி (Henna) ஒரு இயற்கை ஹேர் டை ஆகும். ஆனால் இது தனியாக பயன்படுத்தப்படும் போது, முடியில் செம்மஞ்சள் அல்லது நரம்புக்கனியை போன்ற நிறம் காட்டக்கூடும். இதற்கு மாற்றாக, காபியை இதில் கலந்து சேர்த்து பயன்படுத்தும் போது அது ஹேனாவுடன் சேர்ந்து ஒரு ஆழமான, அழகான கருப்பு அல்லது டார்க் ப்ரவுன் நிறத்தை வழங்குகிறது.

காபியில் (Coffee) உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கூந்தலுக்கு வலிமை அளிக்கின்றன, பொலிவை கூட்டுகின்றன, மற்றும் முடி வளர்ச்சியையும் தூண்ட உதவும்.

தேவையான பொருட்கள்:
மருதாணி தூள் – 100 கிராம்
காபி தூள் – 2 முதல் 3 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

தயாரிக்கும் முறை:
1 கப் தண்ணீரில் 2-3 தேக்கரண்டி காபி தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
நன்கு கஷாயம் போன்று வந்ததும் இறக்கி, ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் 100 கிராம் மருதாணி தூளை போட்டு, ஆறிய காபி சாற்றை மெதுவாக சேர்த்து பேஸ்டாகக் கிளறவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட்டை உருவாக்கலாம்.
இந்த கலவையை 2-3 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைத்து விடுங்கள் – இது நிறம் நன்றாக வெளிய வர உதவும்.
பின்னர் முடியில் வேர்களிலிருந்து நுனி வரை தடவி, 2-3 மணி நேரம் வைத்திருக்கவும்.
சாதாரண நீரில் கழுவுங்கள். உடனே ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்; மறுநாள் ஷாம்பு பயன்படுத்தலாம்.

இந்த கலவையின் நன்மைகள்:
முடிக்கு ஆழமான கருப்பு/ப்ரவுன் நிறம் தரும்
இயற்கையானது, எந்த ரசாயனங்களும் இல்லாதது
முடியை வலிமையாக்கும், பொலிவளிக்கும்
முடி நரையை குறைக்கும்
முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

காபி மற்றும் மருதாணி இரண்டும் கூந்தலுக்கு வலிமையையும், பொலிவையும் அளித்து, கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க..‘இதை’ சாப்பிடுங்க! பரிந்துரைக்கும் பிரபல நடிகை..

மேலும் படிக்க | நீங்கள் வாங்கும் தர்பூசணி உண்மையானதா? கலப்படத்தை எளிதாக கண்டு பிடிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News