)
Non Ac Sleeper Class Passenger Will Get Bedroll From January 1st 2026: தொலைதூர பயணங்களுக்கு ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. பெரும்பாலான பயணிகள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ரயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
ரயில்களில் பயணிப்பவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில்களில் சாதாரண பெட்டிகள், சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகள், ஏசி ஸ்லீப்பர் பெட்டிகள் என்று இருக்கும். இதில், அந்தந்த பெட்டிகளுக்கு ஏற்ப இந்திய ரயில்வே நிர்வாகம் கட்டணங்களை வசூலித்து வருகிறது. ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் தலையணை, போர்வை இலவசமாக வழங்கி வருகிறது.
இப்படியான நிலையில், ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தலையணை, போர்வை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜனவரி 1, 2026 முதல், ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்காக கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை வழங்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயின் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை கோட்டம் 2023–24 ஆம் ஆண்டில் புதிய புதுமையான கட்டணமில்லா வருவாய் யோசனைகள் திட்டத்தின் கீழ் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், பயணிகளுக்கு கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை வழங்க திட்டமிடப்பட்டது.
தலையணை, தலையணை கவர், போர்வை மொத்தமாக சேர்ந்து ரூ.50 கட்டணமாக வழங்கப்பட உள்ளது. போர்வை மட்டும பெற ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தலையணை, ஒரு தலையணை கவருக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக 10 ரயில்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை கோட்டத்தில், பத்து ரயில்களில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்தல், இயந்திரம் மூலம் சுத்தம் செய்தல், விநியோகித்தல் உள்ளிட்ட பணிகளை உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் நிர்வகிப்பதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கவதன் மூலம் ஆண்டுக்கு உரிமக் கட்டணமாக சுமுர் 28.29 லட்சம் கிடைக்கும் எனவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இந்த வசதி ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ரயில் எண் 12671 / 12672 நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12685 / 12686 மங்களூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16179 / 16180 மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ரயில் எண் 20605 / 20606 திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22651 / 22652 பாலக்காடு எக்ஸ்பிரஸ், ரயில் எண் 20681 / 20682 சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22657 / 22658 தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12695 / 12696 திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22639 / 22640 ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16159 / 16160 மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதற்கட்டமாக சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் தலையணை, போர்வை கட்டண அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ