)
இந்தியாவில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாநிலங்களில் கேரளாவும் காஷ்மீரும் முதலிடம் வகிக்கிறது. இயற்கை ஆர்வலராக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலமான சுற்றுலா தலங்கள் நிறைந்திருக்கும் மாநிலமான, கேராளா உங்களை ஒரு போதும் ஏமாற்றாது. இந்த இடம் அழகான கடற்கரைகள், பசுமையான மலைகள், உப்பங்கழிகளுக்கு பிரபலமானது. இது மட்டுமல்லாமல், நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு தேயிலைத் தோட்டங்களைக் காண வருகிறார்கள். நீங்கள் குடும்பத்துடன் செல்லவும், தேனிலவு தம்பதிகளுக்கு இது ஒரு விருப்பமான இடமாகும்.
கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு அருகே அமைந்துள்ள மலைப் பிரதேசம்தான் வாகமன். பசுமையான காடுகள், ஆறு, நீர்வீழ்ச்சி ஆகியவற்றை இங்கு ரசிக்கலாம். பரந்து விரிந்த, மரகதப் புல்வெளிகள், கம்பீரமான பைன் மரக்காடுகள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், ஆர்ப்பரித்து விழும் பேரருவிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்குகள் என இயற்கையின் பலவிதமான அழகுகளை ஒருங்கே கொண்டுள்ள ஒரு சொர்க்கபுரி இந்த வாகமன்.
கேரளவின் மூணாறு ஒரு சொர்க்கத்திற்கு இணையானது. இங்குள்ள வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகள் மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டங்களைப் பார்த்ததால், மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். மேலும் குளிர்ந்த காற்று உங்கள் முகத்தில் வீசும் போது, நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணருவீர்கள். நீங்கள் இங்கு வரும்போது இரவிகுளம் தேசிய பூங்காவை காண மறக்காதீர்கள். அரிய நீலக்குறிஞ்சி பூக்கள் பூப்பதை நீங்கள் இங்குதான் காணலாம். 97 சதுர கி.மீ. பரப்பளவு விரிந்துள்ள இந்தப் பூங்கா, பல்வேறு அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகும். தென்னந்தியாவின் உயரமான சிகரமான 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடி மூணாறில் உள்ளது. அது மலையேற்றத்திற்கான பொருத்தமான இடமாகும்
கிழக்கின் வெனிஸ் நகரம் என்று அழைக்கப்படும் இது, உலகின் பிரபலமான காயல் சுற்றுலாத் தலமாகும். கேரளாவின் பிரபலமான படகு இல்லத்தை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் இரவு முழுவதும் படகு இல்லத்தில் தங்கும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். இதனுடன், காரமான மீன் கறி மற்றும் புதிய வாழைப்பழ பக்கோடாக்களை இங்கே அனுபவிக்கலாம்.
குமரகம் கிராமம், வெம்பநாடு ஏரியின் சிறு தீவுகளின் ஒரு தொகுதியாகும். இங்குள்ள பறவைகள் சரணாலயம் 14 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. புலம்பெயரும் பறவைகளுக்கு விருப்பமான இடம். பறவையியலாளர்களுக்கு சொர்க்கம். கூட்டம் இல்லாமல் காயல்களை அனுபவிக்க விரும்புவோருக்கு குமரகம் சரியான இடம். குமரகம் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் புலம்பெயர்ந்த பறவைகளின் கூட்டம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும். ஹெரான்கள் முதல் குக்கூக்கள் வரை அனைத்தையும் இங்கே நீங்கள் காணலாம். மேலும், காயல்களில் இருந்து சூரிய உதயத்தை கண்டு ரசிக்க மறக்காதீர்கள்.
வடக்கு கேரளாவில் அமைந்துள்ள வயநாடு, மாநிலத்தின் மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இந்த இடம் இயற்கை அழகு நிறைந்தது. அடர்ந்த காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகளை நீங்கள் இங்கே காணலாம். இதனுடன், பழங்குடி வரலாற்றை சித்தரிக்கும் பழங்கால குகைகளும் இங்கே உள்ளன. நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வமாக இருந்தால், பூக்கோடு ஏரி மற்றும் சூச்சிபாரா நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க மறக்காதீர்கள். இதனுடன், பனாசுர சாகர் அணை, செம்பரா சிகரம், மீன்முட்டி நீர்வீழ்ச்சி, குருவத்வீப், லக்கிடி காட்சிப் புள்ளி, வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் பலவற்றை இங்கே நீங்கள் ஆராயலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ