இட்லி அரிசி, தேங்காய் துண்டுகள், தண்ணீர், வெல்லம் ஏலக்காய் தூள் மற்றும் நெய்.
முதலில் இட்லி அரிசியை நன்றாக களைந்து சுமார் ஒரு 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
இதையடுத்து அதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணிலியை சூடானதும் நெய் ஊற்றி தேங்காய் துண்டுகளை வதக்கி, சிறிது தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கரைய வைக்கவும்.
பின்னர் அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைக்கவும். அல்வா புட்டு தயார்.