கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்பு உளுந்து, கோதுமை, உப்பு மற்றும் எண்ணெய்.
முதலில் கம்பு, சோளம் உள்ளிட்ட பொருட்களை நன்கு சுத்தம் செய்து மாவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதையடுத்து மாவில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் தேவைபட்டால் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக தேய்த்து கல்லில் எண்ணெய் விட்டு சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
நீங்கள் ஆசைப்பட்ட சிறுதானிய சப்பாத்தி தயார்.