சுக்கு, மிளகு, வெந்தயம், புளி, தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சின்ன வெங்காயம், எண்ணெய், உப்பு மற்றும் கடுகு.
முதலில் சுக்கு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றையை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து, அதனை பொடியாக அரைத்து கொள்ளவும்.
இதையடுத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த புளியை சேர்த்து கொதிக்கவிட்டு அரைத்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.