Potato Juice For Skin In Tamil: முகத்தின் அழகை மேம்படுத்த மக்கள் பல விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் சமையலறையில் வைக்கப்படும் ஒரு பொதுவான உணவுப் பொருள் உருளைக்கிழங்கு ஆகும். இந்த உருளைக்கிழங்கு உங்கள் சருமத்திற்கு பல வித அதிசயங்களைச் செய்யும். உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை பல சருமப் பிரச்சினைகளைப் போக்க உதவுகின்றன. உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறையை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
முகத்தில் இருக்கும் கறைகளைக் குறைக்க உருளைக்கிழங்கு பயனுள்ளதாக இருக்கும்
உருளைக்கிழங்கில் நல்ல அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளன, இது சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. உங்கள் முகம் வெயிலில் எரிந்தாலோ அல்லது நிறம் மங்கிப்போனாலோ, உருளைக்கிழங்கு சாறை பயன்படுத்தலாம். இது டானிங்கைக் குறைத்து முகத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் அல்லது பருக்கள் போன்றவற்றால் சிரமப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் இதைப் பயன்படுத்துவதன் மூலம், முகத்தில் உள்ள கறைகள் படிப்படியாக நீங்கத் தொடங்கும். அதனுடன் சரும நிறம் சீராக இருக்கும்.
எண்ணெய் பசையைக் குறைத்து முகப்பருவிலிருந்து நிவாரணம் அளிக்கும்
உருளைக்கிழங்கு சாறு மிகவும் எண்ணெய் பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க உதவும். மேலும், இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வியர்வை, தூசி மற்றும் மாசுபாடு நிறைந்த சூழலில் வசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். கோடையில், இது முகத்தை குளிர்விக்க உதவும்.
வயதான அறிகுறிகளைக் குறைப்பதிலும் இது உதவியாக இருக்கும்.
பெரும்பாலும் வயதானவுடன், முகத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் தோன்றத் தொடங்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், உருளைக்கிழங்கு சாறு ஒரு இயற்கையான வயதான எதிர்ப்பு சிகிச்சையாக செயல்படுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை வயதானதற்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. நீங்கள் தினமும் இதை முகத்தில் தடவினால், படிப்படியாக தோல் இறுக்கமாகவும் மென்மையாகவும் மாறத் தொடங்கும்.
உருளைக்கிழங்கு சாற்றை எவ்வாறு முகத்தில் தடவுவது?
உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் பயன்படுத்த, நீங்கள் முதலில் ஒரு பச்சை உருளைக்கிழங்கை எடுக்கக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, அதன் தோலை எடுத்துக் கொள்ளவும், பின்னர் அதை துருவிக் கொள்ளவும் அதன் பின்னர் ஒரு பருத்தி துணியால் அதன் சாற்றைப் பிழித்து எடுத்துக் கொள்ளவும். இதைச் செய்த பிறகு, இந்த சாற்றை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தில் கழுவவும். உங்கள் சருமம் சென்சிடிவாக இருந்தால், முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்துக் கொள்ளவும். பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ‘மைசூர் பாக்’ என்று பெயர் வந்தது எப்படி? இந்த கதையை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









