)
Why Do People Cheat In Love : சமீப காலமாக காதல் உறவில் அல்லது திருமண உறவு, தங்களின் பார்ட்னரை ஏமாற்றுவதும், அவக்ரளுக்கு உண்மையாக இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வருகிறது. அப்படி ஏமாற்றப்பட்டவர்கள், தங்களிடம் தான் ஏதோ ஒரு குறை இருப்பதாக நினைத்துக் கொண்டு, தங்களை தாழ்வாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில், ஒரு உறவில் ஒருவர் உண்மையாக இல்லை என்றால் அதற்கு பின்னால் அவருக்கான காரணங்கள் சில இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
உணர்ச்சி ரீதியான முழுமையின்மை:
ஒரு சிலர், தாங்கள் உணர்ச்சி ரீதியாக முழுமையடையாதது போலவும், பாராட்டப்படாதது போலவும் உணருவர். இதனால் தங்களின் பார்ட்னரிடம் இருந்து ஏதோ ஒரு வகையில் நெருக்கம் வேண்டும் என்று நினைப்பர். அந்த நெருக்கம், அவர்களுக்கு கிடைக்காத போது நியாயமற்று நடந்து கொள்வர்.
உடல் ரீதியான நெருக்கம்:
உடல் ரீதியான தேவைகள் தீர்க்கப்படவில்லை என்றால், தம்பதிகள் வேறு இடத்தில் அதனை தேடுவர். பொருந்தாத காம இச்சைகள், தூரமாக இருந்துகொண்டு காதலிப்பது, உறவை தாண்டி வேறு ஒரு உறவை தேடுவது உள்ளிட்ட காரணங்களால் சீட்டிங் செய்வர்.
சலிப்பு:
ஒரு சிலர், செய்யக்கூடாத விஷயத்தை செய்யும் போது சிலிர்ப்பு உண்டாகும் அல்லவா? அந்த சிலிர்ப்பு தனக்கு வேண்டும் என்பதற்காகவு உறவில் உண்மையற்று இருப்பர். அது மட்டும் அல்லாமல், தன்னுடைய உறவு போர் அடித்துவிட்டது என்றாலோ, ஒரு வித சலிப்பு ஏற்பட்டாலோ இப்படி சீட்டிங் செய்வர்.
குறைந்த சுயமரியாதை:
தனக்கென்று சுய ஒழுக்கமோ, சுய மரியாதையோ இல்லாதவர்கள் அதிக நேரங்களில் உண்மையற்று போவதுண்டு. இது அவர்களின் ஈகோவை தூண்டி விடும். தான் ஒருவரால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தன்னை விரும்பத்தக்கவராக மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதை செய்வர்.
பழிவாங்கல்:
ஒரு சிலர், கோபம், முதுகில் குத்தப்பட்ட உணர்வு போன்ற விஷயங்களால் பார்ட்னரை ஏமாற்றுவர். ஆனால், இது கோபத்தின் வெளிபாடு என்றாலும், இறுதியில் அவர்களுக்கே பெரிய பிரச்சனையாக முடிந்து விடும்.
உறுதி இல்லாமை:
சிலருக்கு, உறவு தேவைப்படாது. ஆனால் உறவில் இருந்து கிடைக்கும் உணர்ச்சிகளும், தேவைகளும் மட்டும் தேவைப்படும். இதன் ஆழத்தை விரிவாக புரிந்து கொள்ளாமல், உறவுக்குள் சென்று விடுவர். பின்னர், அது தேவைப்படாத போது வேறு ஒருவரிடம் சென்று விடுகின்றனர்.
அடிமையாவது:
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போதை இருக்கும். ஒரு சிலருக்கு உடலுறவு வைத்துக்கொள்வது என்பது ஒரு வித போதையாக இருக்கலாம். இது, தீர்க்கப்படாத trauma, அவர்களின் குணத்தின் கோளாறு ஆகியவற்றால் துரோகம் செய்ய தூண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ