TVK Campaign In Karaikudi: காரைக்குடியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று உரையாற்றுவார் என சொல்லப்பட்டு இருந்த நிலையில் அவர் பேசாமலேயே புறப்பட்டார். பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் இவரது பேச்சுக்கு காத்திருந்த தொண்டர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

TVK Campaign In Karaikudi: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழக அரசியல் களத்தில் வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் தவெக தனித்து களம் காண்கிறது.
தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டங்ளுக்கும் சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் பரப்புரை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 10) சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து சாலை வழியாக பரப்புரை வாகனத்தில் சென்றார்.
காலை 10 மணியளவில் வாகனம் மூலம் காரைக்குடி புறப்பட்டு சென்றார். மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு 11.30 மணிக்கு வர இருந்தார். தொடர்ந்து, காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து வஉசி சாலை, தேவர் சிலை, காரைக்குடி டவுன், கண்ணதாசன் மணிமண்டபம் வழியாக திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருந்தார். அதனை தொடர்ந்து, 12.30 மணிக்கு தேவர் சிலை முன்பு திறந்த வேனில் விஜய் பேச இருந்தார்.
நண்பல் 12.30 மணிக்கு விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பேசமாலேயே சென்றுவிட்டார். ஏனென்றால், மதுரை - காரைக்குடி 100 கி.மீ தூரத்தை கடக்கவே 3.30 மணி நேரமானது. இதனால், விஜயால் பரப்புரை கூட்டத்தில் பேச முடியவில்லை. விஜய் பேச காவல்துறை 12.30 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. விஜய் பரப்புரை மேற்கொள்ள இடத்திற்கு வரவே 2.30 மணியை தாண்டியதால், விஜய் பரப்புரையில் உரையாற்றாமல் சென்றுவிட்டார்.
இதற்கிடையில், மதுரையில் இருந்து திருப்பத்தூர் சென்ற விஜயின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுற்று நேரம் சோதனையிட்டனர். இதனை முடித்துக் கொண்டு விஜய் புறப்பட்ட நிலையில், அவரின் வாகனத்திற்கு பின்பக்கமே இருசக்கர வாகனம், கார் மூலம் தொண்ர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இதனால், விபத்துகளும் ஏற்பட்டது. மேலும், விஜய் வாகனம் செல்லும் இடத்தில் எல்லாம் தொண்டர்கள் கூடவே சென்றால், பரப்புரை மேற்கொள்ள நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. இதற்கிடையில், காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் சூழ சைக்கிள் ஓட்டினார்.
சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருக்கும்போதே, தொண்டர்கள் சூழ்ந்ததால், தடுமாறி விழுந்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதற்கிடையில், சிறிது நேரத்திலேயே பரப்புரை வாகனத்தில் ஏறிக் கொண்டார். இதற்கிடையில், விஜய் பேசுவார் என எதிர்பார்த்து காலை முதலே தொண்டர்கள், ரசிகர்கள் காரைக்குடியில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனர். இதில் சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், தவெக தொண்டர்கள் தண்ணீர், ஜூஸ், குளுக்கோஸ் போன்றவற்றை கொடுத்திருக்கின்றனர். இருப்பினும் காலை முதலே கொளுத்தும் வெயிலில் நின்று கொண்ட தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், காலை முதல் மணிக்கணக்கில் காத்திருந்த தொண்டர்கள் அப்செட்டில் வீடு திரும்பினர்.
தவெக தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 11) கடலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். கடலூர், விழுப்புரத்தில் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு பதில் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில், ஆனால் புதுச்சேரியில் அன்றைய தினம் தேர்தல் என்பதால் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை ஏப்ரல் 11ஆம் தேதி மேற்கொள்ள இருக்கிறார. 11ஆம் தேதிக்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் தனித்து களம் காண்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியும், எந்த கூட்டணியும் இவர் பக்கம் வரவில்லை. இதனால், முதல் தேர்தலில் தவெக தனித்து களம் காண்கிறார். இவர் தனித்து களம் காண்பதே சிறந்தது. ஏனென்றால், அப்போது தான், தவெகவின் வாக்கு வங்கி என்ன என்பது தெரியவரும். இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி, பெரம்பூரில் போட்டியிடுகிறார். இவரைதொடர்ந்து, தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சென்னையில் களம் இறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ