Apology: தினமும் இரவில் மனைவி ஐஸ்வர்யா ராயிடம் அபிஷேக் மன்னிப்பு கேட்பார்! காரணம்?

பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன், தினமும் இரவு தூங்கும் முன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்பாராம்... இதற்கு என்ன காரணம் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2021, 11:13 AM IST
Apology: தினமும் இரவில் மனைவி ஐஸ்வர்யா ராயிடம் அபிஷேக் மன்னிப்பு கேட்பார்! காரணம்? title=

ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி, மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகள். நல்ல பிணைப்பைக் கொண்ட ஒரு சில ஜோடிகளில் இவர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். ஆனால், அபிஷேக் பச்சன் தினமும் இரவு தூங்கும் முன் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்பாராம்! இதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதற்கு என்ன காரணம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

பிரபல பாலிவுட் தம்பதிகளான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடியின் பிணைப்பும் இணக்கமும் அவர்கள் பொதுவெளியில் நடந்துக் கொள்வதில் இருந்து தெரியும். இதுநாள் வரை இவர்களுக்கு இடையே பெரிய அளவில் தகராறு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பலமுறை சிறு சிறு ஊடல்கள் ஏற்பட்டதாக  வந்துள்ளன. ஒரு நேர்காணலில், இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையைப் (Marriage Life) பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொன்னார்கள்.

சாதாரண தம்பதிகள் போல தங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அபிஷேக் பச்சனுடன் அடிக்கடி வாதம் செய்வதாகவும் ஐஸ்வர்யா கூறினார். ஆனால், அவை சண்டைகள் அல்ல என்றும் ஒருவிதமான கருத்து வேறுபாடு என்றும் ஐஸ்வர்யா பச்சன் தெரிவித்துள்ளார். இந்த சண்டைகள் இல்லாவிட்டால் திருமண வாழ்க்கை மிகவும் சலித்துப் போயிருக்கும் என்று சொன்ன அபிஷேக் பச்சன் சொன்ன ஒரு விஷயம் வைரலாகிறது…

aish

கருத்து வேறுபாடுள் ஏதேனும் இருந்தால், அதோடு தூங்கச் செல்ல மாட்டோம் என்று தானும், ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து முடிவு செய்ததாக அபிஷேக் (Bollywood Couple) கூறினார். அதனால் தான் தினமும் இரவில் தூங்குவதற்கு முன் மனைவியிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம் என்று சொன்னார். அதோடு, அவர் மற்றுமொரு விஷயத்தையும் சொன்னார். அதற்காக, அவர் மீண்டும் அன்றைய இரவு மன்னிப்புக் கேட்டிருப்பார்.
அபிஷேக் சொன்ன விஷயம் இதுதான்: ’பெண்கள் தங்கள் தவறை எப்படியும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், எனவே ஆண்கள் தான் பெரும்பாலான சண்டைகளில் மன்னிப்பு கேட்பார்கள்”.

Also Read | நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் - வன்னியர் சங்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News