)
Madhampatty Rangaraj Wife Joy Crizildaa Number Hacked : நடிகரும் சமையல் கலை நிபுனருமான மாதம்பட்டி ரங்கராஜை, தான் திருமணம் செய்து கொண்டதாக செலிப்ரிட்டி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அறிவித்தார். இதையடுத்து, சமீபத்தில் அவர் ஒரு பிரச்சனையை சந்தித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா திருமணம்:
“கோடி அருவி கொட்டுதே..” பாடல் இடம் பெற்றிருந்த மெகந்தி சர்கஸ் திரைப்படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புது நடுவராக வந்தார். இந்த சீசனிலும் அப்படியே தொடருகிறார். இவருக்கு, ஸ்ருதி என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த வதந்திகள் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தலையில் குங்குமம் வைப்பது மற்றும் மாலையும் கழுத்துமாக போஸ் கொடுப்பது போலவும் போட்டோக்களை பகிர்ந்திருந்தார்.
அந்த போட்டோக்களின் கீழ், “Mr & Mrs. Madhampatty Rangaraj” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அனைவரும் ஜாய்-மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பமாகி விட்டதாக குறிப்பிட்டு வந்தனர். இதையடுத்து, தங்கள் உறவு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டு ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவை வெளியிட்டார்.
பிரச்சனை:
ஜாய் கிரிஸில்டா, ஏற்கனவே திருமணமான ஒருவருடன் உறவில் இருப்பதால் அவரை இணையம் முழுவதும் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு பக்கம் தனது உறவு குறித்து ஜாய் ஓபனாக கூற, மாதம்பட்டி ரங்கராஜ் இதைப்பற்றி எதுவுமே வாய் திறக்காமல் இருக்கிறார். இதையடுத்து, ஜாய் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த நம்பரில் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் வந்தால் அதற்கு எதுவும் பதிவு கொடுக்க வேண்டாம் என்று காேரிக்கை விடுத்துள்ளார். “யாரிடம் எல்லாம் எனது நம்பர் இருக்கிறதோ, அவர்கள் அந்த நம்பரை டெலிட் செய்து விடுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். திருமண அறிவிப்பிற்கு பின்பு, ஜாய் கிரிஸில்டா இப்படியொரு பதிவை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றின் புகைப்படம்:
ஜாய் கிரிஸில்டா, முன்னரே தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தனது வயிறு பெரிதாகியிருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும், மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த தனது புகைப்படங்களையும், தான் சமீபத்தில் பெற்ற விருதுகளின் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ், இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடனும் உறவில் இருந்து விட்டு, அதைப்பற்றி பேசாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மனைவி ஸ்ருதி ரங்கராஜும் இது குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ