)
2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் கலையில் புகழ் பெற்ற இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு மேலும் புகழ் அதிகரித்தது. இச்சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தானும் மாதம்பட்டி ரங்கராஜுன் திருமணம் செய்துக்கொண்டதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார்.
இதையடுத்து அவ்வப்போது மாதம்ப்பட்டி ரங்கராஜை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வந்தார். சமீபத்தில் கூட அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த வீடியோவை மாதம்பட்டி ரங்கராஜ் எடிட் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாகியது. பலரும் முதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் எப்படி வேறு ஒருரை இரண்டாவதாக திருமணம் செய்து கர்ப்பமாக்க முடியும் என கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், வெள்ளித்திரை நடிகரும் சமையல் கலையால் புகழ்பெற்றவருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாகவும், கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் அவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஸல்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜாய் க்ரிஸல்டா தனது புகாரில், "ரங்கராஜ் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியுள்ளார். தொடர்ந்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர்.
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நானும் ரங்கராஜும் இணைந்து வாழ்ந்தது உண்மை. ஆனால் இப்போது என்னை விட்டு விலகி உள்ளார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவி இருக்கிறார், இரண்டு குழந்தைகளும் உள்ளன. மேலும், அவரது மனைவி ஸ்ருதி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ