)
Madhampatty Rangaraj Recent Post : கடந்த சில நாட்களாவே இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர், மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில், தான் மாதம்பட்டியை திருமணம் செய்து காெண்டதாக ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை மாதம்பட்டி ரங்கராஜ் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
மாதம்பட்டி ரங்கராஜ் திருமண சர்ச்சை!
மெகந்தி சர்கஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். பென்குயின் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் உண்மையில் அவர் ஒரு பெரிய சமையல்கலை நிபுணரும் கூட. கோவையை சேர்ந்த இவர், பல பிரபலங்களின் இல்லத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு கேட்டரிங் சர்விஸ் செய்து கொடுக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புதிய நடுவராக அறிமுகமானார்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கும் திருமணம் ஆனதாக இணையத்தில் பதிவிட்டார். கூடவே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார். இது, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், ஜாய் கிரிஸில்டா மட்டும் தங்களது உறவு குறித்து பெரிதாக பேசி வருகிறார்.
தானும் மாதம்பட்டி ரங்கராஜ்ஜும் கடந்த சில ஆண்டுகளாக உறவில் இருப்பதாகவும், தங்களது உறவு நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்தது என்றும் குறிப்பிட்டார். இது மேலும் பல கிசுகிசுக்களுக்கு வழி வகுத்தது. ரசிகர்கள் பலர், மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் சமூக வலைதள பதிவுகளுக்கு கீழ் சென்று அவரை திட்டித்தீர்க்க, தன்னை இது எதுவுமே பாதிக்காதது போல அவர் காண்பித்து கொள்கிறார்.
புதிய போஸ்ட்..
ஒருபுரம், மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் சமூக வலைதளதம் தீப்பற்றி எறிந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் ஒரு புதிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ்ஜுக்கு, இந்த ஆண்டின் சிறந்த கேடரர் மற்றும் luxure கேட்டரர் என்கிற இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. அவர், இரண்டு விருதுகளையும் கையில் வைத்துக்கொண்டு, மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வாரம் குக் வித் கோமாளியில்..
தனிப்பட்ட வாழ்வில் இத்தனை பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடிலும் கலகலவென வந்து கலந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இந்த நிகழ்ச்சியின் ப்ரமோக்களில் சென்று கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்தாரா? இவர்களது திருமணம் சட்டப்படி செல்லுமா? இன்னும் இந்த விஷயத்தில் வெளிவராத உண்மைகள் என்னென்ன என்பது குறித்து, ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பேசியவாறு இருக்கின்றனர்.
முதல் மனைவி ஸ்ருதியை, முதலில் இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்திருந்த மாதம்பட்டி ரங்கராஜ், இப்போது அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளார். கூடவே, முதலில் பின்தொடர்ந்து வந்த ஜாய் கிரிஸில்டாவை இப்போது ப்ளாக் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ