)
Ram Charan Upasana Parents Second Time : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் ராம் சரண். இவர், 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
11 வருடங்களுக்கு பின் குழந்தை!
தென்னிந்திய நடிகர் ராம் சரண், ‘மகதீரா’ திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு, தொடர்ந்து மாஸ் ஹீரோவாக வலம் வரும் இவர், 2012அம் ஆண்டு, தனது சிறுவயது தோழியும் காதலியுமான உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். நடிகரும் ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவியின் தலைமையில் இவர்களின் திருமணம் ஜாம்-ஜாமென்று நடந்ததது. அதே சமயத்தில், திருமணம் முடிந்து இவர்கள் சில ஆண்டுகள் கழித்தும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது குறித்து ஊரே பேசி வந்தது.
இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது, ‘குழந்தை இல்லை’ என்று இந்த தம்பதியை குத்திக்காட்டி பேசியவர்களை இந்த விஷயம் வாயடைக்க வைத்தது. திருமணம் ஆன புதிதிலேயே, கருமுட்டையை உறைய வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, தங்களுக்கு வேண்டிய நேரத்தில் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டனர்.
இரண்டாவது குழந்தைக்கு தயார்!
சமீபத்தில் சிரஞ்சீவி-ராம் சரண் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால், இதைத்தாண்டி, இன்னொரு கொண்டாட்டமும் இவர்கள் வீட்டில் நடந்திருக்கிறது.
This Diwali was all about double the celebration, double the love & double the blessings.
— Upasana Konidela (@upasanakonidela) October 23, 2025
pic.twitter.com/YuSYmL82dd
ராம் சரணும், உபாசனாவும் இது குறித்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றனர். “இந்த தீபாவளியை, இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். இரட்டிப்பான அன்பு மற்றும் இரட்டிப்பான ஆசிர்வாதங்கள்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த விழாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் அவர்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். புதிதாக தாய்-தந்தையான வருண் தேஜ், லாவண்யா த்ரிப்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பவன் கல்யாண், அவரது மனைவி, நாகார்ஜுனா, அமலா உள்ளிட்ட நடிகர்களும் உறவினர்களும் அவர்களின் வீட்டி விசேஷத்தில் கலந்து கொண்டனர்.
சிரஞ்சீவி சொன்ன கருத்து!
நடிகர் சிரஞ்சீவி, சில நாட்களுக்கு முன்பு மேடையில் பேசிய ஒரு விஷயம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கள் வீட்டில் ஆண் வாரிசே இல்லை என்றும், பெண்க குழந்தைகள் நிறைந்த வீட்டில் வாழும் போது, தனக்கு லேடீஸ் ஹாஸ்டலில் வாழ்வது போல ஃபீலிங் வருவதாகவும் தெரிவித்தார். ராம் சரணிடமாவது, “எனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றுக்கொடு” என்று கேட்டதாகவும், ஆனால் அவருக்கு பெண் குழந்தையே பிறந்ததாகவும் பேசினார். இதை தற்போது நினைவுப்படுத்தி பேசும் ரசிகர்கள், “ஒரு வேளை இது ஆண் வாரிசுக்கான ஏற்பாடாக இருக்குமோ..” என்று பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ