)
RS Karthik About Mari Selvaraj : தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை கொடுக்கும் இயக்குநர்களுள் ஒருவர், மாரி செல்வராஜ். இவர் குறித்து ஒரு நடிகர் பேசியிருக்கும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்ன கூறினார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
மாரி செல்வராஜ்:
ஒரு சில இயக்குநர்கள், ஒரே படம் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தையே “யார்ரா இந்த ஆளு?” என்று திரும்பி பார்க்க வைப்பர். அப்படி, மக்கள் அனைவரையும் தனது முதல் கதையான ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர், மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இந்த சமூத்தில் எந்த மாதிரியான இன்னல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை வலியுடன் காண்பித்திருக்கும் இவர், பல நேரங்களில் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கும் சாதியினரின் வெறுப்பையும் எதிர்கொள்கிறார். திரைக்கு முன்னாலும், திரைக்கு பின்னாலும் இவர் சாதி எதிர்ப்பு குறித்த கொள்கைகளை பேசுவது எப்போதும் மேலோங்கி இருக்கிறது.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட, அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசனை பார்த்து ‘தேவர்மகன் திரைப்படம் தன்னை வெகுவாக பாதித்ததாக கூறினார். இப்படி பல இடங்களில் அடக்குமுறைகள் குறித்தும் சமூக நீதி குறித்தும் தைரியமாக பேசும் இவர், அதனை கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ்-இப்படியொரு ஆளா?
சினிமா நடிகர் ஆர்.எஸ். கார்த்திக், சமீபத்தில் யூடியூப் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் மாரி செல்வராஜ் குறித்த சில விஷயங்களையும் பேசியிருந்தார். தனக்கு அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை மிகவும் பிடித்திருந்ததாக கூறியிருந்தார். ஆனால், கர்ணன் திரைப்படத்தில் நடந்த ஒரு சம்பவம் இவரையே ஷாக் ஆக்கியதாம்.
கார்த்திக்கின் நண்பர்கள் சிலர், கர்ணன் திரைப்படத்தில் வேலை பார்த்ததாக கூறிப்பிடும் அவர், அந்த நடிகர்களை மாரி செல்வராஜ் தரக்குறைவாக நடத்தியதாக பேசியிருக்கிறார். “படத்தின் ஹீரோ தனுஷ், தனது ஷாட் முடிந்தவுடன் கேரவனில் போய் அமர்ந்து கொள்வார், அங்கு நடிக்கும் துணை நடிகர்-நடிகைகள் நிழலில் நிற்பார்கள். அவர்களை ‘இவங்க பெரிய மகாராஜா வீட்டு பிள்ளைங்க வந்து வெயில்ல நில்லுங்கடா..’ என்று சொல்வார்” என கூறுகிறார்.
அந்த படத்தில் நடித்த துணை நடிகைகள், வெயில் படாமல் இருக்க தாவணியால் தலையை மூடிக்கொண்டு நின்ற போது, “இவளுங்க பெரிய ரதி..தாவணிய தலைல இருந்து எடுங்கடீ..” என்று கூறுவாராம்.
குற்றம் சாட்டிய பிற நடிகர்கள்:
மாரி செல்வராஜ் பற்றி இப்படி ஒரு நடிகர் பேசுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர், இப்போதைய துணை முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான உதயனிதி ஸ்டாலினும் மாரி செல்வராஜ்ஜை காமெடியாக “இவர் ஒரு சைக்கோ, அனைவரையும் அடிப்பார்..” என்று கூறியிருக்கிறார்.
மறைந்த நடிகர் மாரிமுத்துவும் மாரி செல்வராஜ் குறித்து பேசியிருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த போது படத்தின் ஹீரோ கதிரை முரட்டுத்தனமாக மாரி செல்வராஜ் நடத்தியதாக கூறியிருந்தார். ஒரு ஷாட்டுக்காக கதிரை வெறும் காலில் அவர் ஓட வைத்ததாகவும் அப்போதுதான் காட்சி நன்றாக இருக்கும் என்று கூறி, மீண்டும் மீண்டும் ஓட வைத்ததாகவும் கூரியிருக்கிறார்.
அதே போல, கதிருக்கு அந்த படத்தில் தந்தையாக நடித்தவர் நெல்லை தங்கராசு. இவரும் ஒரு நேர்காணலில் அவர் முடியை அவிழ்த்துக்கொண்டு ஓடும் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக பல முறை தன்னை அடித்தாக கூறியிருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
உண்மையான குற்றச்சாட்டுகள்தானா?
இப்படி மாரி செல்வராஜ் குறித்து பல நடிகர்கள் பேசுவதுண்டு. பா.ரஞ்சித்தின் மீதும் இப்படிப்பட்ட கருத்துகள் வைக்கப்படும். ஆனால், இவையனைத்தும் உண்மைதானா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு சிலர், இது போன்ற நடிகர்கள் சாதிய அடக்குமுறை நிகழ்வதை ஒரவர் தட்டிக்கேட்பதை பொறுக்கமுடியாமல் இவ்வாறு கருத்துகளை பரப்புவதாக கூறுகின்றனர். இன்னும் சிலர், மாரி செல்வராஜ் இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருந்தால், அவரும் சமூக நீதியை பின்பற்றவில்லை என அர்த்தம் என்று கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ