)
Aishwarya Rai Delhi HC Protect Public Image : உலகளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர், ஐஸ்வர்யா ராய். தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. எத்தனை இந்திய உலக அழகிகள் வந்தாலும், இவர்தான் இப்போது வரை இந்தியர்களுக்கு தெரிந்த உலக அழகியாக இருக்கிறார். இவர் தனது புகைப்படங்களை பயன்படுத்த தடை விதைக்க தொடுத்திருக்கும் வழக்கு பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
புகைப்படங்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு!
ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில், தனது அனுமதி இன்றி யாரும் தனது புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அப்படி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது பல வலைத்தளங்கள் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்ய உபயோகப்படுத்திக் கொள்வதாக கூறப்பட்டது. மேலும், AI-ஆல் மார்ஃபிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் அதில் பயன்படுத்தப்படுவதாகவும் பரப்பப்படுவதாகவும் கூறியிருந்தார். டி ஷர்ட்டுகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தனது புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இது இணையதளங்களில் சமீப காலமாக அதிகமாக பரவி வருவதாகவும் ஐஸ்வர்யா ராய் தரப்பில் விவாதிக்கப்பட்டது.
இதற்கு சான்றாக அங்கீகாரம் பெறாத வலைதளங்கள் பல, தனது பெயரை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும் தளங்களையும் அவர்கள் எடுத்துக்காட்டினர். இந்த வழக்கு விசாரணையில், பல்வேறு நோக்கங்களுக்காக நடிகையின் படங்களை அனுமதி இன்றி பயன்படுத்தும் வலைதளங்களுக்கு எதிராக தடை உத்தரவு தெரிவிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெருகும் AI தொல்லை..!
AI, சில ஆண்டுகளாக தலை தூக்க தொடங்கியதில் இருந்து, பல மாற்றங்கள் உலகில் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களால் பலருக்கு வேலை இழக்கும் அபாயம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாக இருப்பது, பெண்களின் பாதுகாப்பு. ஏற்கனவே இணையதளங்களில் பல்வேறான இடையூறுகளை சந்தித்து வரும் பெண்கள், இப்போது இந்த AI தலைவலியையும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகளின் முகங்கள் Deep Fake செய்யப்பட்டு ஆபாச வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இளம் பெண்கள் பலரும் இந்த Deep Fake வலையில் சிக்கி இருக்கின்றனர்.
முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட இந்த AI தொழில்நுட்பம், இப்படி பல பேரை சிரமத்திற்குள்ளாக்கி வருகிறது. ஐஸ்வர்யா ராய் பாேல, பல நாயகிகளின் முகங்கள் இப்படிப்பட்ட வலைதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க, சரியான வழிமுறை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ