)
Rini Ann George Accuses Politician : மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ் என்பவரை, அரசியல்வாதி ஒருவர் மெசஜ் செய்து ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம். கேரளா அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் நடப்பது என்ன என்பதை காணலாம். மலையாள நடிகையான ரினி அன் ஜார்ஜ் பத்திரிகையாளராக இருந்து நடிகையாக மாறியவர்.
ரினி அன் ஜார்ஜை தவறான கண்ணோட்டத்தில் பிரபல அரசியல்வாதி பார்த்து பேசி உள்ளாராம். அந்த அரசியல்வாதி அடிக்கடி அவருக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். ஹோட்டலுக்கு அழைத்த அரசியல்வாதி ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் அனுப்பியும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை ரினி அன் ஜார்ஜ் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த அரசியல்வாதி தனது செயலை மாற்றி கொள்ளவில்லையாம். இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகை ரினி அன் ஜார்ஜை அவர் ஹோட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் கோபமான நடிகை ரினி, அவரை கண்டித்துள்ளார். கட்சி மேலிடத்திடம் புகார் அளிப்பதாக மிரட்டி உள்ளார். ஆனாலும் அவர் அசராததால் ரினி வெளிப்படையாக அவர் பற்றி பேசியுள்ளார். அரசியல்வாதியின் பெயரை அவர் கூறாமல் தனக்கு நேர்ந்த சம்பவங்களை மட்டும் பட்டியலிட்டுள்ளார். .
இதுபற்றி பேசியுள்ள நடிகை, ‛‛தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை கூட பாதுகாக்க முடியாத இந்த அரசியல்வாதிகள் எந்த பெண்ணை பாதுகாப்பார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இதுபற்றி புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் சமூக ஊடகங்களில் பல பெண்கள் இதே போன்ற பிரச்சனைகளை பேசி வருகின்றனர். இதனால் நானும் பேச முடிவு செய்துள்ளேன் என்று வருந்தியுள்ளார். ஆனால் அந்த அரசியல்வாதி யார் என்று அவர் கூறாத நிலையில், பாஜகவினர் காங்கிரஸ் கட்சியின் பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்தில் என்பவரை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தான் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
நடிகை ரினி, ராகுல் பெயரை கூறாத நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரை பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். பாஜகவினர் கூறும் ராகுல் காங்கிரஸ் கட்சியில் வளர்ந்து வரும் தலைவராக உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில இளைஞர் அணியின் தலைவராக உள்ளார். கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ராகுல் தனது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்வதால் தன் மீது தவறு என்று நினைக்க வேண்டாம் என்றும், யாரும் தன்னை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இளம் நடிகை ரினி தனது நெருங்கிய தோழி என்றும், தனக்கு எதிராக கூறப்பட்ட புகார்களை தான் நம்பவில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார். இதற்கிடையில், கருக்கலைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால், சட்டப்பூர்வமாக அவற்றை எதிர்கொள்வேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மலையாள நடிகை இப்படி கேரள மாநில காங்கிரஸ் தலைவர் மீது கூறியுள்ள பாலியல் புகார் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ