All Eyes on Pahalgam Celebrities Condemn : தெற்கு ஜம்மு காஷ்மீர் பகுதியின் பஹல்காம் பள்ளத்தாக்கில், தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தில், மொத்தம் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் என பலர் இறந்திருக்கும் நிலையில், சில சினிமா பிரபலங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Pahalgam attack : பஹல்காம் தாக்குதல்
ஏப்ரல் 22ஆம் தேதியான நேற்று, ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் இருந்த போது, தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், இஸ்லாமியர்களாக இல்லாதவர்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் இளம் கடற்படை அதிகாரி, தெலங்கானாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி உள்பட பலர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த தாக்குதல் குறித்த பல தகவல்கள், தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் உலக தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.
All Eyes on Pahalgam ட்ரெண்டிங்:
போர் சமயங்களிலும், பேரிடர் சமயங்களிலும் அந்த நாட்டை குறிப்பிட்டு பலர் சில போஸ்டர்களை ட்ரெண்ட் செய்வது வழக்கம். அந்த வகையில், பஹல்காம் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடந்துள்ளதை அடுத்து, All Eyes on Pahalgam தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இது குறித்த பாேஸ்டரை சில பிரபலங்கள் ஷேர் செய்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
கமல்ஹாசன்:
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார் கமல்ஹாசன். இவர், நாட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும், அதற்கு உடனே தனது கருத்தை தெரிவிப்பவராக இருக்கிறார்.
I strongly condemn the heinous terror attack in Pahalgam. My thoughts are with the families who have lost their loved ones, and I wish strength and recovery to the injured.
India stands united — in grief, in resolve, and in our commitment to uphold law, order, and national…
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2025
தற்போது பஹல்காம் தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது போன்ற கொடூர தாக்குதல்களுக்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அடிப்பட்டவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
மோகன்லால்:
மலையாள நடிகர் மோகன்லால், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பஹல்காமில் நடந்துள்ள தாக்குதல், மனதை உடைப்பதாக இருப்பதாகவும் பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை குறிப்பிட்டு பேசியிருக்கும் அவர் “நீங்கள் தனியாக இல்லை” என்றும் கூறியிருக்கிறார்.
My heart goes out to the victims of the Pahalgam terror attack.
It is devastating to witness such cruelty. No cause can ever justify the taking of innocent lives.
To the grieving families, your sorrow is beyond words. Please know that you are not alone. The entire nation stands…— Mohanlal (@Mohanlal) April 22, 2025
சஞ்சய் தத்:
They killed our people in cold blood. This can’t be forgiven, these terrorists need to know we are not staying quiet. We need to retaliate, I request our Prime Minister @narendramodi ji, Home Minister @AmitShah ji and Defence Minister @rajnathsingh ji to give them what they…
— Sanjay Dutt (@duttsanjay) April 22, 2025
பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டிருக்கும் நடிகர் சஞ்சய் தத், தீவிரவாதிகள் ரத்தம் உறைய அவர்களை கொன்று இருப்பதாகவும் இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ராம் சரண்:
Shocked and saddened by the terror attack in Pahalgam. Such incidents have no place in our society and should be strongly condemned.
My prayers are with the families of those affected.
— Ram Charan (@AlwaysRamCharan) April 22, 2025
நடிகர் ராம் சரண், பஹல்காம் தாக்குதல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். நமது சமூகத்தில் இது போன்ற விஷயங்களுக்கு இடம் இருக்க கூடாது என்றும், இதனை கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து தான் வேண்டிக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
அக்ஷய் குமார்:
Horrified to know of the terror attack on tourists in Pahalgam. Sheer evil to kill innocent people like this. Prayers for their families.
— Akshay Kumar (@akshaykumar) April 22, 2025
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இப்படி அரக்க குணம் படைத்தவர்கள் உயிருடன் இருக்க கூடாது என்றும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல் சம்பவம்.. தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!
மேலும் படிக்க | பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட 7 தமிழ் திரைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ