)
AR Murugadoss Interview Controversy : தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், ஏ.ஆர்.முருகதாஸ். இவர், சமீபத்தில் கொடுத்துள்ள நேர்காணல் லோகேஷ் மீது அட்டாக் ஆக இருக்குமோ என்கிற கேள்வி பலர் மனங்களில் எழுந்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் நேர்காணல்..
தொடர்ந்து ஸ்பைடர், தர்பார், சிக்கந்தர் என தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் மதராஸி படத்தை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இப்படம் முருகதாஸிற்கு கம்-பேக் படமாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இதையடுத்து, படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றியையே பெற்றிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், "சிலர் தாங்கள் மிகத் திறமைசாலிகள் என நம்புவார்கள். அதுவே மிகப்பெரிய மாயை. சிலர், 10 டேக் எடுக்கும் ஒரு காட்சியை நான் ஒரே டேக்கில் முடிக்கிறேன், அதனால் நான் ஒரு பெரிய ஸ்டார் என நினைப்பார்கள். அது உண்மை அல்ல, வெறும் மாயை" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது, தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
யாரை சொல்கிறார்?
ஏ.ஆர்.முருகதாஸ், “தன்னை பெரிய ஸ்டார் என்று சிலர் நினைத்துக்கொண்டுள்ளனர்” என்று கூறியிருப்பது யாரை என்கிற கேள்வி பலருக்குள் எழுந்துள்ளது. முருகதாஸின் இந்தப் பேச்சு, லோகேஷ் கனகராஜைக் குறிப்பதாக நெட்டிசன்கள் விவாதத்தை கிளப்பியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, லோகேஷ் ஒரு நேர்காணலில்,"நான் குறைந்த வருடங்களில் அதிகமான பெரிய நடிகர்களை வைத்துப் படம் இயக்கியிருக்கிறேன். இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனக்குத் திறமை இருப்பதால் தான் இது சாத்தியமானது" என்று பெருமையாகப் பேசியிருந்தார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியது லோகேஷ் கனகராஜ் குறித்து தான் என பலரும் கூறி வருகின்றனர்.
பிற நடிகர்கள் யார்?
ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை அஜித்குமார், விஜயகாந்த், சூர்யா, சிரஞ்சீவி, அமீர்கான், விஜய், மகேஷ் பாபு, ரஜினிகாந்த், அமீர்கான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களுடன் மட்டுமே கைக்கோர்த்துள்ளார். இவர்களின் பெயர்களை குறிப்பிடும் ரசிகர்கள், “ஒருவேளை இவரா இருக்குமோ..அவரா இருக்குமோ..” என்று கூறி வருகின்றனர். இவர்கள் அல்லாது, வேறு நடிகர்கள் யாரையாவது செட்டில் பார்த்திருக்கலாம் என்றும், அவர்களை இப்படி அவர் கூறலாம் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.
அடுத்த ப்ளான் என்ன?
அந்த நேர்காணலில் ஏ.ஆர்.முருகதாஸ், தான் பழநிக்கு சென்று மொட்டை போட்டதாக கூறியிருந்தார். கடைசியாக தீனா படத்திற்காக தான் மொட்டை போட்டதாகவும், அதன் பிறகு மதராஸி படத்திற்காக வேண்டுக்கொண்டு மொட்டை போட்டதாகவும் கூறினார். இப்படத்திற்கு பிறகு எந்த படத்தை இயக்கப்போகிறேன் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இவர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அடுத்து பராசக்தி படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி படத்திலும், பின்பு புஷ்கர் காயத்ரி படத்திலும் நடிக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ