Actress Hema Latest News: டோலிவுட் நடிகை ஹேமாவிற்குப் பெரும் சட்ட நிவாரணம் அளிக்கும் வகையில், மே 2024 இல் பெங்களூருவில் நடந்த ஒரு ரேவ் பார்ட்டி (Rave Party) சோதனையுடன் தொடர்புடைய அவர் மீதான போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்கை (NDPS Case) கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த சோதனைகளுக்கு நம்பகமான, தரப்படுத்தப்பட்ட முறைகள் இல்லாததால் குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த முடியாது என்று ஒற்றை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. யார் இந்த நடிகை ஹேமா?, அவர் மீதான் குற்றச்சாட்டு என்ன?, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முக்கிய விவரங்களை பார்ப்போம்.
பிரபல தெலுங்கு நடிகை ஹேமா கைது:
மே 19, 2024 அன்று பெங்களூருவின் ஹெப்பகோடியில் உள்ள ஜி.ஆர். பண்ணை வீட்டில் (GR Farms) நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட ரேவ் பார்ட்டியில் மத்திய குற்றப்பிரிவு (CCB) சோதனை நடத்தியது. அங்குப் பிடிபட்ட 88 பேரில் நடிகை ஹேமாவும் ஒருவராக இருந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டபோது, அவர் MDMA என்ற போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது.
நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு:
தன மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி ஹேமா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையில் உள்ள முக்கியக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியது. குறிப்பாக காவல்துறையினர் நம்பியிருந்த மருத்துவப் பரிசோதனைகள், தரப்படுத்தப்பட்ட தடயவியல் நடைமுறைகள் (Standardised Forensic Procedures) இல்லாமல் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளன. இரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகள் மூலம் போதைப்பொருள் நுகர்வைப் பரிசோதிப்பதற்கான தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை (Nationally Approved Protocol) இந்தியாவில் இல்லை.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய முனைய போதைப்பொருள் பரிசோதனைக் கூடம் (National Nodal Drugs Testing Laboratory) என்று எதுவும் இல்லை. இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட தடயவியல் செயல்முறைக்கு அறிவியல் நம்பகத்தன்மை இல்லை. அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகள் இல்லாமல், இத்தகைய பரிசோதனைகள் நம்பகமான ஆதாரமாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, NDPS வழக்கை மேலும் தொடர்வது சட்டப்படி நிலைக்காது என்று கூறி, பிரபல தெலுங்கு நடிகை ஹேமா மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் வழக்கு (NDPS case) கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
ஹேமாவின் மன வேதனை:
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, ஹேமா ஒரு காணொலிச் செய்தி மூலம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். இந்த வழக்கினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தனது தாயார் இறந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். நீதிமன்றம் தனது பெயரை இந்த வழக்கில் இருந்து விடுவித்ததற்கு அவர் நிம்மதி தெரிவித்தார்.
வழக்கு சம்பவத்தின் பின்னணி:
ரேவ் பார்ட்டியின் போது, போதைப்பொருள் மாத்திரைகள் (MDMA) மற்றும் கோகைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததாகக் கூறி, எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் போதைப்பொருள் நுகர்வு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹேமா உட்பட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார்.
மேலும் படிக்க - ஒருவழியாக மாப்பிள்ளை முகத்தை காட்டிய பிக்பாஸ் ஜூலி! யார் இந்த பையன்?
மேலும் படிக்க - ஒரு ஹிட்... அடுத்து என்ன ஆச்சு? மாயமாய் மறைந்த அந்த நடிகைகள்!
மேலும் படிக்க - படையப்பா படத்தில் வில்லியாக நடிக்க இருந்தவர்..ரம்யா கிருஷ்ணன் இல்லை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









