)
Celebrities Against Neeya Naana Gopinath : சமீபத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது, நீயா நானா நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் எபிசோட். ‘தெருவில் தெரு நாய்களுக்கும் இடம் உள்ளது’ vs ‘தெருக்களில் தெரு நாய்கள் இருக்க கூடாது’ என்று இரு தரப்பினருக்கு இடையேயான விவாத எபிசோட் சமீபத்தில் நடந்தது. இதுதான் தற்போது சில பிரபலங்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
சமீப நாட்களாக தமிழ்நாட்டில் தெரு நாய்களால் ஏற்படும் ரேபிஸ் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. உச்சநீதிமன்றம், ஒரு பக்கம் தெரு நாய்களை ஒரே இடத்தில் போட்டு வைக்க வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பித்தது. நாய் பிரியர்கள், “நாய்களை ஒரே இடத்தில் போட்டு கொல்லப்போகிறார்கள்” என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்றனர். சென்னையிலும் இது நடந்தது. நீயா நானாவின் லேட்டஸ்ட் எபிசோடில், இது குறித்துதான் விவாதிக்கப்பட்டது.
நீயா நானாவின் லேட்டஸ்ட் எபிசோடில் நாய் பிரியர்களாக சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் அம்மு ராமச்சந்திரனமும் ஒருவர். இவர் “பணக்காரர்களை நாய் கடிக்காது, அவர்கள் தெருவிலேயே நடப்பதில்லை” என்றார். “பாதிக்கப்படுவர்கள் நடுத்தர-ஏழை மக்கள்தானே, அவர்கள் ஏன் இதற்கு தீர்வு தேடக்கூடாது?” என்று கோபிநாத் கேட்ட போது, “அவர்கள் எப்படி அதற்கு தீர்வு தேட முடியும்?” என்று கேட்டார். அதே போல நாய் குறைப்பது போல இவர் குறைத்து காட்டியதும் வைரலானது.
படவா கோபி, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். “நாய்களுக்கு நீங்கள் திருடனா, நல்லவனா என்பது தெரியாது. 9 மணிக்கு மேல் நீங்கள் ஏன் வெளியில் செல்கிறீர்கள்? அப்படி சென்றால் நாய் கடிக்கத்தான் செய்யும்” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையானது.
எதிராக திரும்பிய பிரபலங்கள்:
நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, நெட்டிசன்கள் பலர் நாய் பிரியர்களாக பேசியவர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். படவா கோபி, தான் பேசியது எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாகவும், எடிட் செய்யாத வர்ஷனை ஒளிபரப்புமாறும் கேட்டிருக்கிறார். “விஜய் டிவி இப்படி செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றும் கூறினார். அம்மு அருணாச்சலம், 8 மணி நேரம் ரெக்கார்ட் செய்த விஷயத்தை, 45 நிமிடங்கள் எடிட் செய்து போட்டதாக கூறியிருக்கிறார். எதிரில் பேசியவர்களுக்கு மட்டும் அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும், தாங்கள் பேச வரும் போது கோபிநாத் தடுத்ததாகவும் பேசியிருக்கிறார்.
நடிகை வினோதினி, சந்தியா ஜகரல்முடி உள்ளிட்ட அனைவரும் கோபிநாத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு கோபிநாத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
நீயா நானா நிகழ்ச்சி:
சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை, விவாதங்களால் அதற்கு தீர்வு வழங்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதில் பெரும்பாலும் நெகடிவ் பப்ளிசிட்டிதான் அதிகம். இதில் ஆடியன்ஸாக வருபவர்கள் பல்வேறு தரப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் பேசுவது பிரச்சனை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும்தான் இருக்கும். ஒரு சில எபிசோடுகள் ஜாலியானதாக இருக்கும். சில எபிசோடுகளின் டாபிக், மிகவும் கடுமையானதாக இருக்கும். அப்போது விவாதமும் கடுமையாக இருக்கும். இந்த எபிசோட், இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டதாக மாறி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ