)
Autograph Re Release Date : ஒரு சில தமிழ் படங்களை, எத்தனை முறை பார்த்தாலும் அவை பசுமையான உணர்வை நமக்கு கொடுக்கும். அப்படி, தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு, நல்ல நினைவுகளின் தொகுப்பாக மனதில் பதிந்த படம், ‘ஆட்டோகிராஃப்’. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆட்டோகிராஃப் திரைப்படம்:
சேரன் தயாரித்து இயக்கிய படம், ஆட்டோகிராஃப். இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மல்லிகா, கோபிகா, கனிகா என பலர் நடித்திருந்தனர். முக்கிய கதாப்பாத்திரமாக கிருஷ்ணா, ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வெளியான சமயத்தில் பெரிய ஹிட் அடித்த இந்த படம், அப்போதே பலருக்கு பழைய காதலை நினைவு படுத்தியதாக இருந்தது.
21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ்:
கடந்த சில ஆண்டுகளாகவே டாப் ஹீரோக்களின் படங்கள் யாவும் வெளியாவது வழக்கமாகி வருகிறது. விஜய்யின் கில்லி படத்தில் தொடங்கி, ரஜினியின் பாட்ஷா, பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படமான கேப்டன் பிரபாகரன் என பல படங்கள் ரீ-ரிலீஸில் மட்டும் பல கோடி வசூலித்திருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆட்டோகிராஃப் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
21 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இப்படத்தை, வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட தியட்டர்களில் பார்க்கலாம் என்று சேரன் தெரிவித்திருக்கிறார்.
காதல் கதைகள்:
ஒரு சாதாரண இளைஞனின் வாழ்வில் நடக்கும் விஷயங்களையும், காதலையும் காதல் தோல்விகளையும் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ஆட்டோகிராஃப். இதில், பள்ளிப்பருவ காதல் முதல், கடைசியாக பருவத்தில் வரும் காதல் வரை அனைத்தும் காண்பிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, வேலை தேடி நகரத்திற்கு வரும் இளைஞர்கள் அந்த சமயத்தில் எந்த மாதிரியான கடினமான விஷயங்களை நேர்கொள்கின்றனர் என்பதையும் அழகாக காண்பித்திருப்பர்.
இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடல், பலரை தவறான முடிவை எடுப்பதில் இருந்து நிறுத்தியிருக்கிறதாம். எந்த விதமான கடினமான தருணமாக இருந்தாலும், கண்டிப்பாக அதிலிருந்து நம்மால் மீள முடியும் என்பதை நினைவுபடுத்தும் பாடல் அது.
நட்பின் முக்கியத்துவம்:
ஆட்டோகிராஃப் படத்தில், நட்பின் முக்கியத்துவமும் அழகாகவும் ஆழமாகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். இதில், சேரனுக்கு தோழியாக வரும் சினேகா அவருக்காக கடைசி வரை உறுதுணையாக இருப்பார். இதை படத்தில் மிகவும் நேர்த்தியாக காண்பித்திருப்பர். ஒரு காட்சியில், சினேகாவின் தாய் இறந்து விட, தன் நண்பனின் பெரிய வாய்ப்புக்காக தானும் உடன் செல்ல வேண்டிய தருவாயில் அப்படியே வீட்டை பூட்டிக்கொண்டு சினேகா கிளம்பிவிடுவார். இந்த காட்சி ஒன்றே போதும், இவர்களுக்கு இடையேயான நட்பு என்னவென்று சொல்வதற்கு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ