)
தற்போதைய தொழில்நுட்ப உலகில் AI மூலம் பல்வேறு விஷயங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த AI அசுர வளர்ச்சி சினிமாவிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இறந்தவர்களை AI டெக்னாலஜி மூலம் மீண்டும் படங்களில் நடிக்க வைப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு இருந்தாலும், தொடர்பு பல்வேறு படங்களில் AI மூலம் இறந்தவர்களை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ராஞ்சனா படத்தை AI மூலம் சில காட்சிகளை மாற்றி தற்போது வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் ராஞ்சனா படம் வெளியானது. தமிழில் அம்பிகாவதி என்ற பெயரிலும் இப்படம் வெளியானது. தற்போது வரை இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு மாற்றங்களை பற்றி இப்படம் பேசியிருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இருப்பினும் இந்த ராஞ்சனா படம் ஒரு சோகமான கிளைமாக்ஸ் உடன் முடிவடைந்து இருக்கும். இதனிடையே தற்போது இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை AI டெக்னாலஜி மூலம் மாற்றி அமைத்து வெளியிட்டுள்ளனர். இதற்கு படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் தங்களது கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
இயக்குனர் ஆனந்த் எல் ராய் கண்டனம்
"கடந்த மூன்று வாரங்களாக இந்த சம்பவம் எனக்கு கனவு போலவும், மனதை புண்படுத்துவதாகவும் இருக்கிறது. மிகுந்த அக்கறையுடனும், கலை ரீதியாகவும் உருவாக்கப்பட்ட ராஞ்சனா திரைப்படம் எனது அனுமதி இல்லாமல் கிளைமாக்ஸ் மாற்றி அமைக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு படைப்பின் உண்மையான நோக்கத்தையும், அதன் ஆன்மாவையும் சிதைக்கும் செயல் இது" என்று தனது கண்டனங்களை பதிவிட்டுள்ளார் ஆனந்த் எல் ராய்.
தனுஷ் குற்றச்சாட்டு
தனுஷ் தனது X தள பக்கத்தில், "'ராஞ்சனா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியமைத்து மீண்டும் வெளியிட்டது என்னை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. இந்த மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது, மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எனது தெளிவான ஆட்சேபனையையும் மீறி அதை தொடர்ந்தனர். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் அல்ல. ஒரு திரைப்படத்தை AI மூலம் மாற்றுவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் மிகவும் கவலையளிக்கும் ஒரு முன்னுதாரணமாகும். இது கதைசொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
For the love of cinema pic.twitter.com/VfwxMAdfoM
— Dhanush (@dhanushkraja) August 3, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ