)
Aishwarya Rai Bouncer Slapped Bus Driver : தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாக விளங்கி வருகிறார். இவரது கார், விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யாவின் கார்!
திரை பிரபலங்கள் அனைவருமே ஆடம்பரமான, அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், ஐஸ்வர்யாவும் கூட ஒரு விலையுயர்ந்த உயர்ரக காரை வைத்துள்ளார். தற்போது இந்த கார்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது.
இந்த சம்பவம், மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் நடைப்பெற்றிருக்கிறது. புதன்கிழமையான நேற்று, ஒரு முக்கிய சாலையில் ஐஸ்வர்யாவின் கார் சென்று கொண்டிருந்த போது, எலக்ட்ரிக் பஸ் மோதி இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
யாருக்கு என்ன ஆச்சு?
ஐஸ்வர்யா ராயின் கார் விபத்துக்குள்ளானதை அடுத்து, அனைவரும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என பயந்து விட்டனர். ஆனால், நல்ல வேளையாக காரில் ஐஸ்வர்யா ராயோ, அவரது மகள் ஆராத்யாவோ காரில் இல்லை. இதனால், அவர்கள் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறப்படுகிறது.
வைரலாகும் வீடியோ:
இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த காரும் அதனை இடித்த பஸ்ஸும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, அந்த பேருந்தின் ஓட்டுநர் கீழே இறங்கி என்ன டேமேஜ் ஆகியிருக்கிறது என்று சோதித்து இருக்கிறார். அதன் பிறகு, அருகில் இருந்த பங்களாவில் இருந்து வந்த ஐஸ்வர்யாவின் பவுன்சர் ஒருவர் அந்த ஓட்டுநரை வந்து அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் அங்கு விரைந்து வந்துள்ளனர். அதன் பிறகு, ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த நபர் அவரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த FIR எதுவும் பதிவாகவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.க்ஷ
ஐஸ்வர்யாவின் கடைசி படம்..
தமிழில் இருவர் படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், அதன் பின்னர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சில வெற்றி படங்களில் நடித்தார். அவரை இந்தி திரையுலகமும் அழைக்க அங்கும் சில டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் குயினாக வலம் வந்தார். இதனால் அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்தது. குரு படத்திற்கு பின் அபிசேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், ஆராத்யாவிற்கும் தாயானர்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்காெண்ட அவர், கடைசியாக நடித்தது பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ஆம் பாகங்களில்தான். அதன் பிறகு, இவர் சினிமாவில் தலை காட்டவே இல்லை. சமீபத்தில் இவர் தனது கணவரை பிரிந்து விட்டதாகக்கூட தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ