மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகர் திலீப்பின் ‘கம்மார சம்பவம்’ இன்று வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது!
பாலியல் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து பெயிலில் வந்திருக்கும் நடிகர் திலீப். இவரது நடிப்பில் முன்னதாக ‘ராம்லீலா’ வெளியாகி மெகா வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இன்று ‘கம்மார சம்பவம்’ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
மதுபானங்கள் ஒழிப்புக்கு போராடிய கேரளாவின் ILP கட்சியின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான கம்மாரன் நம்பியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உறுவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தமிழ் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்மா தங்கள் பங்கிற்கு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றுள்ளனர். ஒத்தேனன் நம்பியார் என்னும் கதாப்பாத்திரத்தினை ஏற்றுள்ள சித்தார்த் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் எனலாம்.
நடிகர் திலீப் சிறைக்கு செல்வதற்கு முன்னதாக பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்திருந்த நிலையில், படத்தின் நிலை கேள்விக்குறியாக இருந்தது. இதனையடுத்து தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கும் நிலையில் படத்தின் மீதமுள்ள படப்படிப்புகளை படக்குழுவினர் முடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.