)
Mysskin Talks About Vijay : காட்பாடியில் பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் பேட்டியளித்துள்ளார். இதில் அவர் விஜய், விஷால் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிஷ்கின் பேட்டி:
கடைசி விவசாயி படத்தில் நீதிபதி கேரக்டரில் வரும் நடிகை ரேச்சல் சொந்தமாக டோனி & கை பியூட்டி பார்லர் ஒன்றை வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி தனியார் பல்கலைக்கழகம் அருகே தொடங்கியுள்ளார்.இந்த டோனி & கை பியூட்டி பார்லர் திறப்பு விழாவில் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் நடிகை ரேச்சல் தந்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளருமான பிலிப் மற்றும் கன்னியாஸ்திரிகள் இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விஜய் உழைப்பாளி!
பின்னர் மிஷ்கின் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் அரசியல் பயணம் 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். “சினிமாவில் இருக்கும் வரை விஜய் அவர்கள் தம்பியாக இருந்தார் அதானல் அவரை அன்பாக தம்பி என்று அழைத்தேன் இப்போது அவர் அரசியல் தலைவர் ஆகிவிட்டார் அதனால் அவருடைய உறவே வேறு ஆகிவிட்டது. அவரைப் பற்றி அரசியல் கருத்துக்களை நான் சொல்ல விரும்பவில்லை விஜய் அவர்கள் கடும் உழைப்பாளி” என்றார்.
இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் பாடல்கள் வரும் தற்போதைய படங்களில் காப்பிரைட்ஸ் கேட்டு வழக்கு தொடர்கிறார் அதேபோல் சசிகுமார் நடித்த படத்தில் தியாகராஜன் படத்தின் பாடல் வந்த பொழுது படக்குழுவினருக்கு தியாகராஜன் நன்றி தெரிவித்தார் திரை உலகில் இரு வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருவது குறித்து கேட்டதற்கு
இளையராஜா நமக்கு ஒரு தாய் தந்தை மாதிரி. சினிமாவில் அதிக மியூஸிக் டைரக்டர்கள் இருக்ககும்போது அவருடைய பாட்டை ஏன் எடுக்க வேண்டும் புதியதாக இசை அமைத்துக்கொள்ளாமே. நமக்கெள்ளாம் ஒரு தாய் பால் மாதிரி இளையராஜாவின் பாடு இருந்து இருக்கிறது என்றார்.
தெருநாய்கள் குறித்த கேள்விக்கு...
தெருநாய்களுக்கு குரல் கொடுத்த பெரும்பாலானவர்கள் தற்போது அந்த நாய்களுக்கு எதிர்ப்பாக குரல் கொடுத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் " முதலில் ஒரு தெருவுக்கு 2 நாய்கள் வீதம் மட்டுமே இருந்தது. இப்போது அது பெருகிவிட்டது. இதனால் குழந்தைகளையும் பெரியவர்களையும் அது துன்புறுத்துகிறது கடிக்கிறது. இந்த விவாகரத்தை 2 விதமாக பார்க்கவேண்டும். ஒட்டுமொத்த இந்திய தத்துவத்திலேயே உயிர்வதை என்பது கொடுமையானது. ஒரு பிராணி என்பதும் உயிர் தான். ஆகவே இதனை இரண்டு விதமாக ஆலோசிக்க வேண்டும். இதுபற்றி நிறைய படித்தவர்கள் கலந்து ஆலோசித்து சரியான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
விஷால் பற்றி..
விஷால் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விஷால் என் குழந்தை அவன் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணும் எனக்கு தெரிந்த பெண். இருவரும் இணைவது எனக்கு மிகுந்த சந்தோஷம். விஷால் என்னை திருமணத்திற்கு கூப்பிடவே வேண்டாம். விஷாலுக்காக எப்பவும் நான் பிரையர் பண்ணுவேன். திருமணம் நடக்கும் நாள் அன்று நான் தள்ளி நின்றே இரவு முழுவதும் பிரையர் செய்வேன் என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ